என்றாள்.
"சொல்லுங்க..."
"பொதுவா நான் என் ஃபிரெண்ட் பவி கிட்ட எதையும் மறைத்ததில்லை... இந்த விஷயத்தையும் மறைப்பது கஷ்டம். முழுதாக இல்லை... கொஞ்சம் மேலோட்டமா அவளிடம் இதைப் பற்றி சொல்வேன்... அவளும் அதே காலேஜில் லெக்சரராக தான் இருக்கா... தப்பா எடுத்துக்க மாட்டீங்களே????"
ஏதோ சாக்லேட்டை தோழியுடன், பகிர்ந்துக் கொள்ளலாமா என்று கேட்கும் குழந்தை போல் பாரதி கேட்ட விதத்தை கண்டு விவேக்கிற்கு சிரிப்பு வந்தது. பாரதியின் இந்த இன்னொரு முகம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"உங்க ஃபிரெண்டுன்னு சொல்றீங்க நல்லவங்களா தானே இருப்பாங்க... சரி... ஆனால் இது நிறைய பேருக்கு தெரிவது நல்லதில்லை...”
"புரியுது சார்..."
"சரி, நான் கிளம்புறேன்... உங்க பதிலில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லையா????" என்றான் அவன் விளையாட்டாக!
"ஹுஹும்... எப்படி முயற்சி செய்தாலும் வேறு விதமாக யோசிக்கவே முடியலை சார்... " என்றாள் பாரதியும் விளையாட்டாக.
பதிலாக புன்னகைத்து விட்டு, அவளிடம் விடைப் பெற்றுக் கிளம்பினான் விவேக்.
அவன் கிளம்பிச் சென்ற பின்னும் சில நிமிடங்கள் அங்கேயே இருந்து, அவனுடன் பேசியதை மீண்டும் அசை போட்டாள் பாரதி. எதனாலோ அவளின் மனம் கட்டுக்கடங்காமல் பறந்தது. இது சரி அல்ல என்று தோன்றியப் போதும், அவளுக்கும் இது பிடித்தே இருந்தது!!!
தொடரும்...