(Reading time: 11 - 22 minutes)
Manasa Theevu
Manasa Theevu

  

" அத்தான்..." என்றாள், மயங்கும் விழிகளுடன்.

  

" ஹேய், ஈ சுந்தரன் நிண்ட அத்தானோ?" என்று கேட்ட தோழிகளுக்கு பதில் கொடுக்காமல், அவனை நோக்கி வேகமாக சென்றாள்.

  

அவன் கார் கதவை அவளுக்காக திறந்தான். அவள் வியப்போடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

" ஏறிக்கோ ரஞ்சி, எல்லோரும் நம்மளையே நோக்கிட்டுண்டு, நாம கார்ல உட்கார்ந்த பிறகு நீ என்னை நோக்கலாம், கேட்டோ?"  என்று அவன் கூறவும், அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள். விருட்டென்று காரில் ஏறி உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த உடன் கதவை மூடி விட்டு தன் புறம் சென்று அமர்ந்து காரைக் கிளப்பினான்.

  

சிவரஞ்சனி நல்ல அழகு, நீண்ட கூந்தல், காதில் ஜிமிக்கி, நீளமான கழுத்தில் வைர பெண்டன்ட் கோர்த்த தங்க சங்கிலி. ஒல்லியான உடம்பு, நல்ல உயரம் மொத்தத்தில் நல்ல அழகு.  அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த் பைரவ.

  

அவள் வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தாள். " என்னடா, என்னை நிமிர்ந்து பார்." என்றான், அவள் புறம் திரும்பி உட்கார்ந்திருந்தான் .  அவள் வெட்கத்தோடு தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

  

" யூ லுக் வெரி பியூட்டிஃபுல், ரஞ்சி!"

  

" தாங்க்ஸ் அத்தான்!" என்றாள், வெட்கத்துடன்.

  

அவர்கள் இருவருக்கும் ஏழு வயது வித்யாசம்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.