(Reading time: 11 - 22 minutes)
Manasa Theevu
Manasa Theevu

அவள் மருமகளை ஆச்சர்யமாய் பார்த்தாள். " இது யாரு எண்ட ரஞ்சி குட்டியோ? " என்று அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்கவும், வெட்கத்தோடு முகத்தை மூடினாள் ரஞ்சனி.

  

பிறகு, மாதவன், மானசாவின் காலில் விழுந்து  ஆசி வாங்கினாள். அவளை தூக்கி நிறுத்தி தன்னோடு அனைத்துக் கொண்டார் மாதவன் நாயர்.

  

அவள் பிறகு தன் அப்பா, அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கினாள்.

  

 பிறகு கலயானம் எப்போது, எப்படி செய்யலாம் என்று விரிவாக பேசினார்கள்.

  

 ஆனந்த் கல்யாணம் செய்துக் கொண்டு அவர்கள் இருவரும் அமெரிக்கா செல்வதாகக் கூறினான்.

  

மாதவனுக்கும், மானசாவிற்கும் அதிர்ச்சியாக இருந்தது. " என்ன சொல்ற ஆனந்தா நீ திரும்பி அமெரிக்கா போறியா?"

  

" ஆமாம்மா, ரஞ்சனி அமெரிக்காவில் எம்பிஏ படிக்கட்டும், நான் அவ முடிக்கற வரை அவளோடு அங்கிருந்து நம்ம பிசினஸை பார்த்துக்கறேன் அம்மே. என்ன அச்சா, நீங்க எந்து பரைஞ்சு?"

  

" நல்லது எண்ட மோனே. ரெண்டு பேரும் ஒன்னாத்தானே இருக்கணும், உனக்கு எப்படி தோன்றதோ அப்படியே செய்."

  

அதற்குள், அவளுக்கு எம் பி ஏ செய்ய விண்ணப்பித்தான் ஆனந்த், ரஞ்சனியோடு.

  

இருவரும் தங்கள் குடும்பத்தோடு கல்யாண ஷாப்பிங் செய்தார்கள்.

  

கல்யாணம் ஆன உடன். ஆனந்தும், ரஞ்சனியும் அமெரிக்காவுக்கு கிளம்பி போய்விட்டார்கள்.

  

மகளுக்கும், மகனுக்கும் கல்யாணம் செய்து விட்ட சந்தோஷம், மாதவனுக்கும்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.