சொன்னாத்தான், உனக்கு என்ன பிடிக்குமா இல்லையான்னு எனக்கு தெரியும்." என்று அவளைக் கேட்டான்.
அவள் வெட்கப்பட்டுக் கொண்டே, " எனக்கு உங்களைப் பிடிக்கும் அத்தான்."என்றாள்.
" பின்னே, விவாஹம் கழிக்கலாமா?"
" சரி! " என்று தலை ஆட்டினாள்.
அவள் கையை எடுத்து ஒரு முத்தம் கொடுத்தான், பிறகு, நிண்ட அம்மை, அச்சனிடம் நம்முடைய விவாஹம் பற்றி பேசப் போறார், எண்ட அச்சன். ஞான் எண்ட அச்சனிடம், பேசிட்டேன், சரியா? உனக்கு சந்தோஷம்தானே?" என்று அவளிடம் கேட்டான்.
அவள் , வெட்கத்துடன் சந்தோஷமாக தலை ஆட்டினாள்.
" பட்சே எனக்கு மேலே படிக்கணுமே!" என்றாள்.
" படிச்சுக்கோ, நம்ம விவாஹம் கழிச்சு, படிக்க போய்க்கோ."
" அது எப்படி சாத்தியம் அத்தான், உங்களை விட்டு நான் எப்படி?" என்று பேச்சை நிறுத்தினாள்.
" என்னடா, விவாஹம் உன் படிப்பு முடிஞ்ச பிறகு வச்சுக்கலாமா?"
"அது வந்து… அத்தான்….. அது…. அது..."
" என்னடா? அது.. அதுன்னு, அதையே சொல்ற? என்ன வேணும், அத்தான உடனே விவாஹம் கழிக்கணுமோ, எண்ட ரஞ்சிக்கு?" என்று சிரித்துக் கொண்டே, அவள் மூக்கை இழுத்து, அவளைக் கொஞ்சும் குரலில் கேட்டான்.