" நீங்க எப்போ அத்தான் வந்தீங்க, ஏன் என் கிட்ட சொல்லல?" என்று அவள் கேட்க
" உன் எக்சம்ஸ் முடியனும், உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான், உன்கிட்ட சொல்லாமல் வந்தேன். எப்படி எழுதியிருக்க உன் எக்சம்ஸ் எல்லாம்?"
" ரொம்ப நல்லா எழுதியிருக்கேன் அத்தான். தாங்க்ஸ் அத்தான், எனக்கு ரொம்ப ஹெல்ப் செய்தற்கு …."
" ரஞ்சி, நான் இங்கேயேதான் இருக்கப் போறேன், உன்னோட ஃபியுச்சர் கோல் என்ன?" என்று அவன் கேட்கவும்.
" தெரியலையே, அச்சனும், அம்மையும் என்ன சொல்றாங்கன்னு தெரியலையே?" என்றாள் வெகுளியாக.
" உன் பியூசர் பற்றி நீதானே முடிவு பண்ணனும்."
" அது… அது வந்து……"
" என்ன இழுக்கற? நீ இன்னும் சின்ன குழந்தை இல்லை ரஞ்சிமா, "
" இல்லை அத்தான்.. அது வந்து…"
"ஓக்கே, இப்போ உன் விருப்பத்தை மட்டும் சொல்லு நீ என்ன பண்ணனும்னு நினைக்கிறே?"
தெரியலையே அத்தான்,அப்பா என்ன சொல்லுவாரு தெரியல, நீங்க சொல்லுங்க, நான் என்ன பண்ணட்டும்?"
"கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேட்டான் நேரடியாக
"ஐயோ விவாஹமா என்ன சொல்றீங்க அத்தான் ?”