(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நீங்க மட்டும் வராமல் இருந்திருந்தால், எங்க வீட்டு பர்த்டே பேபி ரொம்ப வருத்த பட்டிருப்பாங்க...”

  

அதுக்கு எல்லாம் நாங்க விட்ருவோமா... எப்படியாவது பாரதி மேடமை பிடிச்சு இழுத்துட்டு வந்திருக்க மாட்டேன்?” என்றாள் பவித்ரா.

  

சந்தித்த உடனேயே நட்புடன் ஈசியாகப் பேசிய பவித்ராவை உமாவிற்குப் பிடித்திருந்தது!

  

தேங்க்ஸ்ங்க... ஆனாலும், நானும் கூப்பிட்டால் தானே நல்லா இருக்கும்...”

  

நீங்க சொல்றதும் ஒரு விதத்தில் நிஜம் தான்... வேலை முடிஞ்சா வரேன்னு சொன்ன பாரதி கூட, நீங்க கால் செய்தப் பிறகு, வேலையை தூக்கி போட்டுட்டு வந்துட்டாங்கல்ல...” என்றாள் பவித்ரா.

  

ரொம்ப தேங்க்ஸ்ங்க, பாரதி... இப்படி பெயர் சொல்லி கூப்பிட்டால் தப்பா எடுத்துக்க மாட்டீங்க தானே?”

  

தப்பா எடுத்துக்க என்ன இருக்கு... அதெல்லாம் எதுவும் இல்லை...” என்றாள் பாரதி.

  

பாரு, எதையுமே தப்பா எடுத்துக்க மாட்டாள்... அவள் ஒரு வித்தியாசமான ஜீவன்...” என்றாள் பவித்ரா தோழியை கேலியாகப் பார்த்துக் கொண்டே...

  

உங்களை மாதிரி ஒரு நல்ல ஃபிரெண்ட் இருக்கும் போது அவங்களுக்கு என்ன குறை... மது உங்க ரெண்டுப் பேரை பத்தியும் என் கிட்ட நிறைய சொல்வாள். நீங்க ரெண்டுப் பேரும் கட்டிட்டு அவரும் சாரீயில் தொடங்கி, உங்க ரெண்டுப் பேருடைய டீச்சிங் வரைக்கும் பேசிட்டே இருப்பாள்....”

  

நீங்க சொல்றதைப் பார்த்தால், உங்களுக்கு ரொம்ப அலுத்துப் போன மாதிரி இல்லை இருக்கு...” என்றாள் பவித்ரா.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.