“அச்சச்சோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை... மது அப்படி சொல்லி சொல்லி கேள்வி பட்டிருப்பதால் உங்க ரெண்டு பேரையும் புதுசா பார்ப்பதாகவே தோணலை, ரொம்ப பழகினவங்களை சந்திப்பது போல் இருக்கு...”
உமா பேசி கொண்டிருந்த போதே,
“பாரதி மேம், பவித்ரா மேம்...” என துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் மதுமதி.
பேசிக் கொண்டிருந்த மூவரும் மது பக்கம் திரும்பி புன்னகைத்தனர்.
“ரொம்ப தேங்க்ஸ் மேம். நீங்க வருவீங்களோ மாட்டீங்களோன்னு நினைச்சிட்டே இருந்தேன்...”
“மெதுவா, மெதுவா... கொஞ்சம் மூச்சு விட்டு பேசு... அது தான் உங்க அண்ணி போன் செய்து கூப்பிட்டாங்களே, அதுக்கு பிறகும் எப்படி நாங்க வராமல் இருப்பது...” என்றாள் பவித்ரா.
“ஓ! அப்போ சின்ன அண்ணனுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும்... அவர் தான் அண்ணியை வச்சு இன்வைட் செய்ற ஐடியா கொடுத்தது...” என்றாள் மது.
பாரதி முன்பு விவேக்கின் பேச்சை எடுக்காமல் இருப்பது நல்லது என நினைத்து உமா அவசரமாக பேச்சை மாற்றினாள்.
“மது, நீ உன் பிரெண்ட்சை போய் பாரு... நான் இவங்களை அத்தைக்கு இன்ட்ரோட்யூஸ் செய்து வைக்கிறேன்... கேக் கட் பண்ண எல்லாம் ரெடியான்னு...”
“அதெல்லாம் ரெடி அண்ணி... ஸ்ருதி இப்போ தான் சொன்னாங்க... இன்னும் ஒரு ரெண்டு மூணு நிமிஷத்தில ஃபங்க்ஷன் தொடங்கிடலாம்... நான் அங்கே போய் இருக்கேன், நீங்களும் சீக்கிரம் வாங்க...” என்று சொல்லி, மற்ற இருவரிடமும் விடை பெற்று சென்றாள் மது.
“மதுவை இப்படி துறுதுறுன்னு பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... அதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் நான் ரொம்ப தேங்க்ஸ் சொல்லனும்.” என்றாள் உமா.