வந்திருந்தவர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்று சொல்ல முடியவில்லை. சிலர் வைரங்களோடு ஜொலித்தனர். சிலர் மிகவும் சிம்பிளாகவும் இருந்தனர்.
உண்மையில், உமா தொலைப்பேசியில் பேசி அழைத்திருக்கா விட்டால், பாரதி மதுவிற்காக கூட இங்கே வருவதாக இல்லை... உமா அழைத்தப் போது அவளால் மறுத்துப் பேச முடியவில்லை. ஆனால், இங்கே வந்ததில் உறுத்துவதாக எதுவும் நடக்கவில்லை. மது கேக் வெட்டும் போது மட்டும் தான் விவேக்கைப் பார்த்தாள். மற்றபடி அவனை பார்க்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
அதுவும் நல்லது தான் என அவள் மனதில் எண்ணும் போதே,
“என்ன நீங்க தனியா இருக்கீங்க?” என்ற விவேக்கின் குரல் அவளின் அருகே ஒலித்தது...
பாரதி குரல் வந்த திசையில் திரும்பினாள். விவேக் புன்னகை மின்ன நின்றிருந்தான்.
அவள் சிந்தனையில் மகிழ்ந்ததற்கு எதிர்மாறாக அவன் சரியாக அப்போது வந்துப் பேசவும், பாரதிக்கு ஒரு மாதிரியாக தான் இருந்தது.
தொடரும்...