(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

நீங்க...” என்றுத் தொடங்கிய பவித்ராவின் பதிலின் நடுவே,

  

உமா, எல்லாம் ரெடி தானே, ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்று ஒரு குரல் ஒலித்தது.

  

ஆமாம் அத்தை, எல்லாம் ரெடி தான்... இவங்க பவித்ரா, இவங்க பாரதி, நம்ம மதுவோட லெக்சரர்ஸ்...” என்று கற்பகத்திற்கு பதில் சொல்லி விட்டு, பாரதி பவித்ராவை அவளுக்கு அறிமுகமும் செய்து வைத்தாள் உமா.

  

ஓ! உங்களை மீட் செய்ததில் ரொம்ப சந்தோஷம். மதுவும், உமாவும் உங்க ரெண்டுப் பேரையும் பத்தி அப்பப்போ பேசுவாங்க... நீங்க பார்ட்டிக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம்..” என்றாள் கற்பகம்.

  

மற்ற இருவரும் சிம்பிளாக பதில் வணக்கம் சொல்லவும்,

  

வாங்க ஃபங்க்ஷனை ஆரம்பிச்சிடலாம்....” என்று அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி சென்றாள் கற்பகம்.

  

மற்ற மூவரும் கற்பகத்தை தொடர்ந்து சென்றார்கள். ஆனால் அலங்கார இடத்திற்கு அருகே செல்லாமல் நின்றனர்.

  

நீங்க போங்க... நாங்க இங்கேயே இருக்கோம்.” என்று உமாவிடம் சொன்னாள் பாரதி.

  

நானே உரிமையா உங்களை பேரை சொல்லி கூப்பிடுறேன். அப்புறம் நீங்க மட்டும் இப்படி யாரோ மாதிரி பேசினால் எப்படி? என்னை எல்லாம் ஃபிரெண்டா அக்செப்ட் செய்துக்க மாட்டீங்களா, என்ன?”

  

என்ன இப்படி சொல்லிட்டீங்க? அப்படி எல்லாம் இல்லை, எப்படி பேர் சொல்லி கூப்பிடுறதுன்னு தான்...”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.