(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

செய்யாமல் தன் மனதிற்கு தடைப் போட்டு வைத்திருந்தாள்.

  

திடீரென யாரோ அவளை உலுக்குவதுப் போல் தோன்றவும், அவசரமாக விழித்துப் பார்த்தாள் பாரதி.

  

ஹேய் பாரு, என்ன இது அதிசயமா பஸ்சில தூங்குற? எவ்வளவு நேரமா எழுப்புறேன் தெரியுமா... என்று போலியான அலுப்புடன் சொன்னாள் பவித்ரா...

  

தோழியைப் பற்றி தெரிந்ததால்,

  

இது என்ன கேள்வி பவி, தூக்கம் வந்துச்சு தூங்கினேன்...” என்று இலகுவாக சொன்னாள் பாரதி...

  

ம்ம்ம்... இந்த பேச்சுக்கு எல்லாம் குறைச்சல் இல்லை... சரி நான் ரெண்டு மூணு போட்டோஸ் கொடுத்தேனே என்ன ஆச்சு?”

  

ப்ச்... போ பவி...”

  

நான்கு மாதங்களுக்கு முன் முடிவு செய்ததுப் போல், பவித்ராவும் பாரதிக்கு மும்முரமாக ரமேஷிடம் சொல்லி திருமண வரன்கள் பார்க்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் பாரதி இன்னமும் பிடிக் கொடுக்காமல் இருந்தாள். அதற்காக எல்லாம் விட்டு விடாமல் பவித்ரா தோழியை தொல்லை செய்துக் கொண்டே இருந்தாள்.

  

நீ உதை வாங்க போற, பாரு... ஒழுங்கா பார்த்து பதில் சொல்... அந்த ரெட் ஷர்ட் போட்டிருக்குற ஆள் சூப்பரா இருக்கான் தானே?”

  

அப்படியா? இதை ரமேஷ் அண்ணா கிட்ட சொன்னீயா???”

  

ஏன் பாரு உனக்கு இந்த நல்ல எண்ணம்???”

  

எனக்கு என்னவோ இன்னும் கல்யாணத்தில ஒரு இண்டரெஸ்ட் வரலை பவி... இன்னும்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.