கொஞ்சம் நாள் ஆகட்டும்...”
“சும்மா இரு நீ... நீ செலக்ட் செய்யலைன்னா நானே செலக்ட் செய்றேன்... அந்த போடோஸ் கொடு...”
“என்கிட்டேயா இருக்கு அந்த போடோஸ் எல்லாம்?”
“நீ உதை வாங்க வேண்டிய ஆளு தான்...”
“சும்மா சொன்னேன்ப்பா... இரு தரேன்....”
பாரதி கைப்பையில் தேடி ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து பவித்ராவிடம் கொடுத்தாள்.
“ஓகே பாரு, டன்! இந்த சனி, ஞாயிறு, ஃபுல் டைம் நீ என்னோட தான் ஸ்பென்ட் பண்ணனும்...”
“பவி என் கேரக்டருக்கு ஏத்த மாதிரி எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க...”
“அது உன்னுடைய நினைப்பு... யாராவது இருக்காங்களா இல்லையான்னு தான் பார்ப்போமே...”
“ப்ச்... தேவையே இல்லாத வேலை பவி...”
பவித்ரா பாரதிக்கு பதில் சொல்ல முயற்சி செய்யாது கைகளில் இருந்த போட்டோக்களை பார்க்கத் தொடங்கி இருந்தாள்!
*************
சனிக்கிழமை அன்று பவித்ராவும், பாரதியும் ஒன்றாக நுங்கம்பாக்கத்தில் இருந்த பிரபல மாலை அடைந்தார்கள்.
“இதெல்லாம் தேவையா பவி? பாவம் நித்திலா, அவள் கூட டைம் ஸ்பென்ட் பண்ணாமல்... ப்ச்...” பாரதி கேள்வியுடன் தோழியைப் பார்த்தாள்.