“நீ தானே பாரு, ட்ரெடிஷனல் முறைப் படி பொண்ணு பார்க்க எல்லாம் அலோ பண்ண மாட்டேன்னு சொன்னது? அப்புறம் இப்போ இப்படி புலம்பினால் நான் என்ன செய்றது?”
“நான் ஒன்னும் புலம்பலை, உனக்காக தான் சொன்னேன்...”
“ஹலோ பவித்ரா, பாரதி!”
பேசியபடி நடந்துக் கொண்டிருந்த பவித்ராவும், பாரதியும், யாரோ அழைத்தக் குரலில், குரல் வந்த பக்கம் பார்த்தார்கள்.
உமா கையில் தன் குழந்தையுடன் இருந்தாள். அவர்களுக்கு அருகே உமாவின் கணவன் நிரஞ்சனும் இருந்தான்.
“ஹலோ உமா... ஹலோ சார்...” என்று பாரதி சொல்ல, பவித்ராவும், அவர்களை சந்தித்த மகிழ்ச்சியை முகத்தில் வெளிப்படுத்தி புன்னகைத்தாள்.
“உங்க ரெண்டுப் பேரையும் பார்த்தே ரொம்ப நாள் ஆகிடுச்சு... எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தாள் உமா.
“நல்லா இருக்கோம்...” என்று பவித்ரா உமாவிடம் பதில் சொன்ன நேரத்தில், போது பாரதி ஆவலுடன் குழந்தை நித்யாவிடம் சைகை செய்து விளையாடினாள்.
பவித்ரா, உமா பேசி முடித்து அவளைப் பார்க்கவும்,
“ரொம்ப க்யூட்ங்க உங்க பாப்பா...” என்றாள் பாரதி!
“தேங்க்ஸ் பாரதி...” என்று உமா சொல்ல,
“சரி, அப்போ நீங்க மூணுப் பேரும் பேசிட்டு இருங்க... நான் ஜூஸ், ஸ்நேக்ஸ் எல்லாம்