பார்த்தால் கொஞ்சம் நல்ல டைப்பாக தான் தோணுது...”
“ஆனால், அப்படி பார்த்து இந்தக் காலத்துல எதையும் சொல்ல முடியாதே...”
“அது என்னவோ சரி தான்...”
“டைம் க்ளிக் ஆனா தானா கல்யாணமும் ஃபிக்ஸ் ஆகிடும்... எங்க வீட்டுல விவேக்கிற்கும் இப்படி தான் எந்த இடமும் சரியா செட் ஆக மாட்டேங்குது...” என்றாள் உமா.
இவள் ஏன் சம்மந்தம் இல்லாமல் விவேக்கை பற்றி பேசுகிறாள் என்று மீண்டும் புரியாமல் விழித்தான் நிரஞ்சன்.
பவித்ராவோ, “என்ன???? அவருக்கும் ஸ்ருதிக்கும் கல்யாணம்னு கேள்விப் பட்டேனே..” என்றாள் அதிர்ச்சியுடன்!
“அப்படி யார் உங்களுக்கு சொனனது?”
“விவேக் தான் சொன்னார்... அப்புறம், உங்க மதர்-இன்-லாவும் சொன்னாங்க... அது என்ன ஆச்சு?”
உமாவிற்கு மட்டும் இல்லாமல் நிரஞ்சனுக்கும் பவித்ரா சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமாக இருந்தது.
“சரியா தெரியலை பவித்ரா, அந்தப் பேச்சு இருந்தது தெரியும்... ஆனால் ஸ்ருதிக்கு வேற இடத்தில இப்போ மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு...”
“ஓஹோ!!!”
அந்த நேரத்தில், மூன்றாவது முறையாக பவித்ராவின் கைப்பேசி அலறியது. எடுத்துப் பேசி விட்டு வைத்தவள்,