“ஹாப்பி அனிவேர்சரி... பாவம் உங்க ரெண்டு பேரையும் நாங்க தொல்லை செய்றோம்... சாரி, நாம இன்னொரு நாள் பேசலாம் உமா... நாங்க இப்போ கிளம்புறோம்...” என்றாள் பவித்ரா.
“தொல்லை எல்லாம் இல்லை... நீங்க இப்படி திடீர்னு கிளம்பினால் இந்த ஜூஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் யார் காலி செய்வது? சாப்பிடும் வரைக்குமாவது கம்பெனி கொடுங்க...” என்றாள் உமா.
“நீங்க முன்னாடியே அனிவேர்சரின்னு சொல்லி இருந்தால் சார் வருவதற்கு முன்பே கிளம்பி இருப்போம்...” என்று நிரஞ்சனை மன்னிப்புக் கோருவதுப் போல பார்த்துக் கொண்டு சொன்னாள் பவித்ரா.
நிரஞ்சன் மறுப்பாக தலை அசைத்தான்.
“என்னங்க நீங்க? என்னால் தான் கிளம்புறேன் சொல்றீங்கப் போல இருக்கு... நான் வேணும்னா அந்தப் பக்கம் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரட்டுமா?”
“என்ன சார்...”
“ப்ளீஸ் சார்...”
பாரதியும், பவித்ராவும் வேக, வேகமாக நிரஞ்சனை தடுத்தார்கள்.
“என் வைஃப் உங்க ரெண்டுப் பேரையும் பத்தி நிறைய சொல்லி இருக்கா... மதுவை இப்படி சந்தோஷமா பார்க்கும் போது, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... இது வரைக்கும் உங்களை நேரடியா சந்திக்க வாய்ப்பு அமையலை... இப்போ கடைசியா மீட் செய்துட்டேன்... அதனால ஃபார்மாலிட்டி எல்லாம் பார்க்காம உட்காருங்க... ஃப்ரீயா பேசுங்க...”
நிரஞ்சனின் பேச்சை ஏற்றுக் கொண்டு, நால்வரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்... திடீரென பவித்ராவின் கைப்பேசி சத்தமாக அலறியது. எடுத்துப் பேசியவள், பாரதி பக்கம்