நடக்கனும்னு வேண்டிக்க கோவிலுக்கு போயிருக்காங்க... நித்திலாவையும் கூட அழைச்சிட்டுப் போனாங்க..."
"கோவிலுக்கு போயிருக்காங்கன்னு ஷார்ட்டா சொல்லி இருக்கலாம் தானே!!!"
"என்னை கடுப்பேத்தாதே, பாரு... உனக்கு வயசாகிட்டே போகுது... உனக்கென்ன இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்பாக்கும்... இப்போ இந்த டைமை மிஸ் செய்தால் அப்புறம் கஷ்டம்..."
"இதெல்லாம் பழைய காலத்தில சொல்ற டையலாக் பவி. இப்போ எல்லாம் முப்பது வயசுக்கு மேல தான் கல்யாணம் பத்தி யோசிக்கவே ஆரம்பிக்குறாங்க..."
பவித்ரா முறைக்கவும், அவளை திசைத் திருப்ப,
"ஆமாம் அம்மா இங்கே இல்லையே, அப்புறம் நீ என்ன இந்தப் பக்கம்? ரமேஷ் அண்ணா எங்கே?" என்றாள் பாரதி கண்ணை சிமிட்டியபடி.
"நீ என்கிட்டே இருந்து இன்னைக்கு உதை தான் வாங்கப் போற! பேசாமல் இந்த முருங்கக்காயை கொஞ்சம் கட் பண்ணுங்க லெக்சரர் மேடம்..."
"முருங்கைக்காயா???" என்று பாரதி போலியாக கண் சிமிட்டி ஆச்சர்யப்படவும், அவள் தலையில் செல்லமாக கொட்டினாள் பவித்ரா.
"இன்னும் ஒரு வருஷத்தில உன்னை கல்யாணம் செய்து பேக் பண்ணி அனுப்பலன்னா பார்த்துக்கோ..."
"ஹ்ம்ம்... பார்ப்போம்... பார்ப்போம்..."
அதன் பின் இருவரும் தங்களின் வகுப்புகளைப் பற்றியும், பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியது பற்றியும், மாணவர்களைப் பற்றியும் என பொதுவாக பேசியப்படி வேலையை தொடர்ந்தார்கள். பேச்சுவாக்கில் மதுவின் பெயர் வரவும், மும்முரமாக கேஸ் அடுப்பில் வைத்திருந்த பாத்திரத்தில் கிண்டி கொண்டிருந்த பவித்ரா, தீயை குறைத்து விட்டு, பாரதி