"சாரி சார் எல்லா காட்டேஜும் புக் ஆகியிருக்கு. நெக்ஸ்ட் மன்த்தும் நல்ல வெதர் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கும்!"
"ஆ, அப்போ நாம திரும்ப போகனுமா?" ஷில்பா அழுது விடுவாள் போல கேட்டாள்.
ப்ரீத்தி மகளை அணைத்து ஆறுதல் சொல்ல, ஷர்மிளா, "நகுல் எதையாவது சரியா செய்றானா!" எனக் கோபப்பட்டாள்.
"இப்போ என்ன செய்றது அதுல்?" ப்ரீத்தி புரியாமல் கேட்டாள்.
அதுல் யோசித்தான்!
"வேற காட்டேஜ் ஏதாவது கிடைக்குமான்னு பார்க்கிறேன். இது த்ரீ பெட்ரூம், பெரிய ஹால்ன்னு வசதியா இருந்திருக்கும். நமக்கு சரியா இருந்திருக்கும். ஸ்டில், ஏதாவது செய்வோம்!"
அதுல் பிரீத்தியிடம் சொல்லி முடித்து தன் மொபைலை கையில் எடுத்தான். அப்போது அவனின் பார்வை பக்கத்தில் இருந்த பெண்ணின் மீது விழுந்தது. அவள் பாவம் என்று யோசிப்பவளைப் போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
ரிசர்வேஷனில் இருந்த தேதிகளை சரி பார்க்காமல் நடந்துக் கொண்டது அவனுக்கு என்னவோ போல இருந்தது. அதனால் அவளிடம், "சாரி, எங்களால உங்களுக்கும் இன்கன்வீனியன்ஸ்!" என்றான்.
தொடரும்...