(Reading time: 5 - 10 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

04. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

காரை பார்க் செய்து விட்டு சஞ்சீவ் வீட்டின் உள்ளே வந்தப் போது இந்து காஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். வேண்டும் என்றே அங்கே அருகில் இருந்த காலி சோபாவில் அமர்ந்தான்.

  

"இந்து, உனக்கு சஞ்சீவ தெரியாது தானே? இப்போ தான் எம்பிஏ முடிச்சுட்டு வந்தான்..."

  

ஏற்கனவே இந்து மீது கடுப்பில் இருந்த சஞ்சீவ், அம்மா மேலும் ஏதேனும் சொல்லி தன்னை அசிங்கப் படுத்தும் முன், குறுக்கிட்டு,

  

"போதும் அம்மா என் கதை எல்லாம் அவங்களுக்கு எதுக்கு? ஆனால் அவங்களை பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே... அவங்களே பெரிய்ய கம்பனிய தனியா நடத்தும் புத்திசாலி... எல்லா விஷயத்தையும் நல்லா விசாரிச்சு செய்யுற பொறுமைசாலி...." என்றான்

  

அவன் காலையில் நடந்த குளறுபடியை தான் நக்கலாக சொல்கிறான் என்று புரிந்ததால், அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள் இந்து ...

  

நிஜமாகவே அதற்காகவே பேச ஆரம்பித்த சஞ்சீவ், அவள் மின்னல் பார்வையைக் கண்டு தடுமாறினான்...அவனுக்கு இது ஒரு புதிய அனுபவம்... அவள் அவனை பார்த்தது ஒரு வினாடியை விட குறைவாகவே இருக்கக் கூடும் ஆனாலும் அந்த கண்கள் அவனை என்னவோ செய்தது.

  

அதற்குள் அங்கே ராஜீவும், கீதாவும் வரவே பேச்சு வேறு பக்கம் திரும்பியது. இந்து ராஜீவுடன் நட்புடன் பேசுவதைப் பார்த்தான் சஞ்சீவ்.

  

அவனைப் பார்த்தால் மட்டும் அவளுக்கு என்ன இளக்காரம்?

  

இந்து காஃபி குடித்து விட்டு கிளம்பினாள்.. காஞ்சனாவிடமும், ராஜீவிடமும் சொல்லி விட்டு, கிளம்பினாள். வேண்டும் என்றே சஞ்சீவிடம் சொல்லாமல் அவனை ஒருப் பார்வை பார்த்து விட்டு கிளம்பினாள். இந்துவை வெளியில் சென்று வழி அனுப்பி விட்டு வந்த கீதா, சஞ்சீவ் சத்தமாக,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.