"ச்சே இந்த நாட்டில் நல்லதிற்கு காலமே இல்லை... ஒரு உதவி செய்தால் தேங்க்ஸ் சொல்ல கூட சிலப் பேருக்குத் தெரிவதில்லை..." என்று புலம்புவது கேட்டது.
அவன் தன் காதில் பட வேண்டும் என்பதற்காகவே சொல்கிறான் என்பதை உணர்ந்த கீதா, புன்னகையோடு, அவன் அருகில் சென்றாள்
"சாரி சஞ்சீவ்... இந்துவை தப்பா நினைக்காதீங்க... அவள் கொஞ்சம் மூடி டைப்... சீக்கிரம் யார் கிட்டேயும் பேச மாட்டாள்..." என்றாள்.
"பின்னே எப்படி அவ்வளவு பெரிய கம்பெனி நடத்துறாங்க? "
"பர்சனல் லைஃப் வேற அது வேற இல்லையா?"
அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த காஞ்சனா,
"டேய், இந்துவைப் பத்தி பேசாதே நீ... அவளுக்கு இருக்கிற பொறுப்புணர்ச்சியில பாதி உனக்கு இருந்தா கூட பராவாயில்லையே... பொண்ணுன்னா அப்படி தான்டா இருக்கனும் சும்மா கண்ட கழுதைக் கிட்ட எல்லாம் பேச முடியுமா??" என்றாள்!
அம்மா அவனை கழுதை என்று சொன்னதை விட, அருகில் இருந்த அண்ணனும் அண்ணியும் சிரிப்பதை பார்த்து எழுந்த கோபத்தில் அங்கே இருந்து எழுந்து சென்றான் சஞ்சீவ்.
************
இரவு பத்து மணியளவில், அலுவல் சம்பந்தமாக மொபைலில் பேச தோட்டத்திற்கு வந்த ராஜீவ், சஞ்சீவ் அங்கே யோசனையோடு அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிசயப் பட்டான்.
"என்னடா சஞ்சீவ் இந்த நேரத்தில இங்கே? எப்பவும் வெட்டியா chat பண்ணிட்டு இருப்ப? என்ன ஆச்சு?"