இருந்தாலும் கூட, பொதுவாக தன அம்மாவின் விருப்பதிற்கு ஏற்றவாரே முடிவுகளை எடுத்து வந்தாள்.
சரவணின் எதிர்பாராத மறைவு மனைவி மகள் இருவரையுமே மிகவும் பாதித்திருந்தது. அந்த குடும்பத்தின் ஆணிவேராக இருந்து அனைத்தையும் செய்து வந்த சரவணனை இழந்த பின் இருவரும் தன்னிலைக்கு வரவே சில மாதங்கள் ஆகின. இந்துவிற்கு தன் அம்மாவை நினைத்து பெரிதும் கவலையாக இருந்தது. அவளுக்கு திருமணம் என்று ஒன்று நடந்து அவள் கணவனுடன் சென்று விட்டால் அவள் அம்மாவை யார் கவனிப்பது? இப்பொழுதெல்லாம் அவளுக்கு தான் ஆணாக பிறந்திருக்க கூடாதா என்று ஆதங்கமாக இருந்தது.
அர்ச்சனா அந்த காலத்திலேயே பொறியியல் பட்டம் பெற்றவர். திருமணத்திற்கு முன் தன் குடும்பத்தினரை போல் தானும் ஏதேனும் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தவர் தான். அனால் திருமணத்திற்கு பின் அர்ச்சனா தன் கணவன் சரவணின் வளர்ச்சிக்கு உதவவே விரும்பினார். இதில் அவள் தாத்தாவிற்கு மிகுந்த வருத்தம் என்பதை இந்து அறிந்தே இருந்தாள். ஆயினும் தன் மனைவின் சொத்தை எதிர்பாராமல், தன் முயற்சியால் வெற்றி பெற்ற மருமகனை எண்ணியும் அவருக்கு பெருமை தான். அதனால் தான் தன் வியாபாரங்களின் முக்கியமானவற்றை தன் இரு மகன்களுக்கு கொடுத்தவர், இரு சிறிய துணை நிறுவனங்களை தன் மகளுக்கு கொடுத்தார். அவர் மறைவுக்கு பின் பிற்காலத்தில் பிரச்சனை வராது இருக்க அவளின் இரு மாமன்களும், அந்த துணை நிறுவனங்களை, தனி நிறுவனமாக மாற்றி அர்ச்சனாவிற்கே கொடுத்து விட்டனர். ஆயினும் அர்ச்சனா ஒரு பங்குதாரராய் இருந்து அதை மேற்பார்வை பார்த்தாரே அல்லாது, தனியாக ஆர்வம் எதுவும் காட்டவில்லை. அனால் சரவணனின் மறைவுக்கு பின் அர்ச்சனா தினமும் அலுவலகம் சென்று அந்த நிறுவனங்களை நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார். தந்தையின் நினைவுகளில் இருந்து மீண்டு வரவே அம்மா முயற்சிக்கிறார் என்பதை அறிந்திருந்ததால், இந்துவும் எதுவும் சொன்னதில்லை.
கீதாவிற்கும் அர்ச்சனாவை மிகவும் பிடிக்கும். அர்ச்சனாவிற்கும் கீதா மீது தனி பிரியம் உண்டு. அதனால் தான் கீதா ராஜீவின் காதல் விஷயம் தெரிந்ததும், அதற்கு சம்மதிக்க மறுத்த காஞ்சனாவிடம் பேசி அவர்கள் திருமணம் நடக்க வழி வகுத்தார். அதில் இந்துவிற்கு சந்தோஷம் என்றாலும், கீதா தன் காதல் கை கூட விட்டுக் கொடுத்தவற்றை எண்ணி அவளுக்கு வருத்தம் தான். இந்த நினைவு வந்த உடன் நேற்று நடந்த நிகழ்சிகள் மீண்டும்