"தனியா இரண்டு குட்டிசையும் உன்னால சமாளிக்க முடியாது, நானும் வரேன்..."
அவன் கொஞ்சமாக உரிமையோடு பேசவும், அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். இவனின் இந்த சகஜமான குரலை கேட்டே எத்தனை நாட்கள் ஆகிவிட்டன என மனதில் நினைத்தபடி, எதுவும் சொல்லாது அமைதியாக எழுந்து நடந்தாள்.
"அம்மா, மேடம், நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் நேரம் என்ஜாய் செய்ங்க... நாங்க குழந்தைகளை கவனிச்சுக்குறோம்..."
பாரதி கேட்டதில் கற்பகத்திற்கு பெரிய ஆச்சர்யம் இல்லை, ஆனால் அவளுடன் கூட வந்து நின்ற இளைய மகனை பார்க்கவும் கற்பகத்திற்கு மனதில் இருந்த மற்ற சிந்தனைகள் மறந்து சிரிக்க தோன்றியது. விவேக் பொதுவாக மற்றவரின் கையில் இருக்கும் போது குழந்தையை செல்லம் கொஞ்சுவானே தவிர, அவனாக கைகளில் ஏந்தியது இல்லை. அதில் என்னவோ அவனுக்கு தயக்கம்!!! இன்று பாரதிக்காக எனும் போது எந்த தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை... இந்த காதல் தான் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது, என்ன விதமாக எல்லாம் பாடு படுத்துகிறது!!!!
மனதில் நினைத்ததை வெளியில் சொல்லாமல்,
"தேங்க்ஸ் பாரதி... நானும் கொஞ்ச நேரம் கடலில் நின்னுட்டு வரேன்.... நீங்களும் வாங்க..." என்று கமலாவையும் அழைத்தாள்.
தயங்கிய கமலாவை பாரதி சமாதனப் படுத்தி அனுப்பி வைத்தாள். சிணுங்கிய நித்யாவை செல்லம் கொஞ்சிய படி அவள் சமாதனப் படுத்துவதை பார்த்தபடி நித்திலாவும் விவேக்கும் அமர்ந்திருந்தனர். நித்யா அழுகையை நிறுத்தவும்,
"நித்யா பாப்பா, அம்மா போலவே சமத்து பாப்பா... தொல்லையே செய்ய மாட்டாங்க..." என்றாள் பாரதி.
அவள் சொன்னதை புரிந்துக் கொண்டதை போல் நித்யாவும் தன்னுடைய பிஞ்சு கைகளை