(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

06. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

"ஞ்சீவ், திரும்பி வரும் போது எப்படிடா வருவே? எனக்கு வேணும்னால் போன் பண்ணு நான் காரை அனுப்பி வைக்கிறேன்," என்றான் ராஜீவ்.

  

"சரிண்ணா போன் செய்றேன்..."

  

"சஞ்சீவ், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீயா? இன்னைக்கு இந்துவோட அம்மா கிட்ட இந்த கவரை கொடுக்கனும்னு நினைச்சேன். இப்போ முடியாது... இதை இந்து கிட்ட கொடுத்து அவங்க அம்மாக் கிட்ட கொடுக்க சொல்றீயா?"

  

ராஜீவின் கையில் இருந்த கவரை வாங்கியவன்..

  

"இது என்ன கவர் அண்ணா? என் கிட்ட சொல்லலாமா?" என்று விசாரித்தான்.

  

"இல்லை அது பெரிய தங்க மலை ரகசியம்... போடா...." என்றவன் தொடர்ந்து,

  

"அந்த கவரை திறந்து பார் அதில ஒரு போட்டோ இருக்கும்...."

  

ராஜீவ் அப்படியே செய்தான். அந்த போட்டோவில் ஒரு அழகான இளம் வாலிபன் சிரித்து கொண்டிருந்தான்.

  

"யார் அண்ணா இது? அர்ச்சனா ஆன்ட்டி அவங்க கம்பனிக்கு மாடல் எதாவது கேட்டாங்களா என்ன?"

  

"டேய் கிண்டலா? அது யார் தெரியுமா? ஜென் இண்டஸ்ட்ரீஸ் டைரக்டர் ஷிவமோட ஒரே பையன் பிரசாத். எனக்கு மிஸ்டர் ஷிவம நல்லா தெரியும். அவங்களுக்கு இந்துவ ரொம்ப பிடிச்சிருக்காம். என்கிட்டே அர்ச்சனா ஆன்ட்டி கிட்ட பேச சொன்னாங்க..... நான் ஆன்ட்டி கிட்ட பேசியாச்சு. அவங்க ஜாதகம், போட்டோ வேணும்னு சொன்னாங்க.. அது தான் இந்த கவர்ல இருக்கு...."

  

சஞ்சீவுக்கு கோபமாக வந்தது. ஆனால் அதை வெளி காட்ட முடியவில்லை. அதனால்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.