(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"உனக்கு ஒன்னு தெரியுமா சஞ்சீவ், அர்ச்சனா ஆன்ட்டி கீதாக்காக பேச வந்தப்போ அங்கிள் இறந்து ஆறு ஏழு மாசம் தான் ஆகி இருந்துச்சு... ஆனால் அவங்க, அவங்க சொந்த கவலை எல்லாம் தள்ளி வச்சுட்டு எங்களுக்காக வந்தாங்க... கீதா, அம்மா சொன்ன நிபந்தனைக்கு எல்லாம் ஒத்துக்கிட்ட போது அம்மா உடனேயே கல்யாணம் பண்ணி ஆகணும்னு அடம் பிடிச்சாங்க... இந்து அப்போ இங்க இல்லை... கீதாக்கு மட்டும் இல்லை எனக்கும் அதில ரொம்ப வருத்தம் தான்... இந்து சொல்லி தான் ஆன்ட்டி நம்ம வீட்டுக்கு பேச வந்துருப்பங்க.. ரெண்டு பேரும் அவங்க கஷ்டம் பத்தி நினைக்காமல் கீதாவுக்காக வந்தாங்க பாத்தீயா? கீதாவோட அண்ணனோ அப்பா அம்மாவோ கூட இதை செய்யலை... அம்மாக்கிட்ட போன்ல வாங்கி கட்டி கிட்டதோட சரி...."

  

"இன்னும் எவ்வளவோ சொல்லலாம்டா... நான் இந்த பிசினஸ் ஆரம்பிச்ச காலத்தில கொஞ்சம் குழப்பமா இருக்கும் அப்போல்லாம் சரவணன் அங்கிள் கிட்ட தான் ஐடியா கேட்பேன்... "

  

"புரியுது அண்ணா... அண்ணியோட அம்மா அப்பா மட்டும் இல்லையே உன்னோட தம்பி கூட உன் லவ் க்கு ஹெல்ப் பண்ணலை தானே?" என்றான் சஞ்சீவ் நிஜமான வருத்ததோடு.

  

"அதெல்லாம் இல்லைடா.. நீ வளர்ந்த விதம் வேற... உனக்கு அப்போ பிரெண்ட்ஸ் கூட சுத்தறதும் கூத்தடிக்கிறதும் தான் லைப் ன்னு இருந்துச்சு...கீதாவையும் இந்துவையும் வீணாவையும் பார்க்கும் போதெல்லாம் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்குடா.. எப்படி இப்படி பிரெண்ட்ஸா இருக்காங்கன்னு.. ...?"

  

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது.. அமைதியாக காரை ஓட்டிய ராஜீவ், சஞ்சீவை பார்த்து,

  

"நீ ஏன் அம்மாக்கு இந்துவை பிடிக்குதுன்னு கேட்டியே... அதுக்கு காரணம் இது தான்... அன்னைக்கு திட்டினதுக்கு ஈடுக்கட்ட இன்னைக்கு அன்பா நடந்துக்குறாங்க." என்றான் புன்னகையோடு.

  

"அதெல்லாம் சரி தான் அண்ணா அதுக்காக நீ இப்படி ஜாதகம் போட்டோ எல்லாம் வாங்கி தரணுமா என்ன??"

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.