(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"ஏன் அண்ணா உனக்கு எதுக்கு இந்த மேரேஜ் புரோக்கர் வேலை எல்லாம்? உன் நிலையை விட்டு நீ ஏன் இறங்கி வர?"

  

அவனை ஆச்சர்யமாக பார்த்த ராஜீவ்,

  

"என்னடா புரியாமல் பேசுற? கல்யாணம் என்றால் சும்மாவா? இப்படி தான் ஒரு மூணு நாலு பேர் கிட்ட சொல்லி வைப்பாங்க... இதில என்ன அதிசயம் இருக்கு.. அதுவும் இந்துவுக்கும், சரவணன் அங்கிள் க்கும் , அர்ச்சனா ஆன்ட்டி க்கும் நான் ரொம்ப கடமை பட்டிருக்கேன்..."

  

"அப்படி என்ன அண்ணா பெரிய கடமை???? அம்மா வேற அந்த இந்துவை ரொம்ப தலையில தூக்கி வைக்கிறாங்க?"

  

"அம்மா விஷயம் வேற டா....." என்றான் ராஜீவ் புன்சிரிப்போடு...

  

"அது என்ன அண்ணா?"

  

"நேத்து நைட் சொன்னேன் ஞாபகம் இருக்கா? இந்து எங்க கல்யாணத்திற்கு ரொம்ப ஹெல்ப் செஞ்சான்னு?"

  

"ஆமாம்...."

  

"நானும் கீதாவும் காலேஜ் ல இருந்தே லவ் பண்ணினோம்... அதை பத்தி அம்மா கிட்ட சொல்ல ரொம்ப தயக்கமா இருந்துச்சு...  அப்படியே ஒரு ரெண்டு வருஷம் போச்சு... கீதாக்கு அவங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க.. வேற வழி இல்லாமல் கீதா எங்க விஷயத்தை அவங்க வீட்டில சொல்ல வேண்டியதாச்சு.. அப்புறம் நானும் சொன்னேன்...."

  

"அது தான் தெரியுமே... நம்ம வீட்டில ஒரு பெரிய எரிமலையே வெடிச்சுதே....."

  

"ம்ம்ம்ம்... கீதாவை பார்க்க கூடாது பேச கூடாது ன்னு ஒரே கட்டுப்பாடு. அப்போ தான் இந்து

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.