"ஞாபகம் இருக்கா, நம்ம அப்பா பேர்ல அம்மா நடத்துற ஸ்காலர்ஷிப் ல படிச்சு ஸ்டேட் ரேங்க் எடுத்த ஒரு பொண்ணை அம்மா நம்ம வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டுருந்தாங்க?"
"ஆமாம்... நம்ம ரெண்டு பேருக்கு கூட அந்த பொண்ணை பக்கத்தில வச்சுக்கிட்டே லெக்சர் கொடுத்து மானத்தை வாங்கினாங்க..."
"ம்ம்ம்ம் பரவாயில்லையே... அவ்வளவு ஞாபகம் வச்சிருக்கிறே... இந்த நந்தினி தான் அந்த பொண்ணு..."
"ஓ"
சஞ்சீவ் அதன் பின் எதுவும் பேசவில்லை. அவன் மனதில் இன்று அண்ணன் சொன்ன பல விஷயங்கள் ஓடி கொண்டிருந்தன. மீண்டும் முதல் நாள் இந்துவை பார்த்த போது மனதில் பதிந்த அவள் முகம் நினைவுக்கு வந்தது. தன் மனதில் இருந்த குழப்பங்களை விடுவித்து ஒரு முடிவிற்கு வந்தான்.
***************
ராஜீவ் சஞ்சீவை எஸ் எ இன்டஸ்ட்ரீஸ் அருகில் இறக்கி விட்டு விட்டு கிளம்பி சென்றான். மனதில் மகிழ்ச்சியுடன் இறங்கி நடந்த சஞ்சீவ், கீதா இந்துவிடம் சொல்லி விட்டாளா என தெரிந்து கொள்வதற்காக கீதாவிற்கு செல் போனில் அழைத்தான். அனால் அவள் நம்பர் பிஸியாக இருந்தது. சரி உள்ளே போய் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தவனாய் ரிசெப்ஷனை அடைந்தான். தான் இந்துவை காண வந்திருப்பதாக சொன்னான். அவன் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் வந்திருப்பதை உணர்ந்து, அவன் விவரங்களை பெற்றுக் கொண்டு, கேட்டு சொல்வதாக சொல்லி அவனை அங்கே அமர சொன்னாள் அந்த ரிசெப்ஷனிஸ்ட். சஞ்சீவ் மனதில் காரணம் இல்லாது ஒரே மகிழ்ச்சி கொப்பளித்துக் கொண்டிருந்தது.
தொடரும்...