"இந்து இல்லாமால் வேற யாருக்காகவாவது என்றால் நானும் அப்படி தான் நினைத்திருப்பேன்... அதுவும் இது இந்துக்காக மட்டும் இல்லை அர்ச்சனா ஆன்ட்டிக்கும் சேர்த்து செய்ற ஹெல்ப் இல்லையா?"
"ஆனால் அண்ணா அவங்க கிட்ட பணம் இருக்கு அழகு இருக்கு அப்புறம் என்ன? நேராகவே போய் வேண்டியவர்கள் பேச வேண்டியது தானே?"
"ம்ம்ம்ம் நீ சொல்றது சரி தான்... இங்கே பிரச்சனையே இந்து தான்...."
"என்ன???"
"ஆமாம்டா.. இந்து கல்யாணம் இப்போ வேண்டாம் வேண்டாம் வேண்டாம் ன்னு ஒரு வருஷமாய் சொல்லிட்டு இருக்காள்...."
"இது என்ன பிரச்சனை? எந்த பொண்ணு எனக்கு கல்யாணம் வேணும் வேணும்ன்னு சொல்வாள்?"
"இது அப்படி இல்லைடா... சரி உன்கிட்ட சொல்ல என்ன.... எங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச ஒரு நாலு அஞ்சு மாசத்திலேயே இந்துக்கும் கல்யாணம் நடக்குறதாய் இருந்துச்சு.. ஆனால் சரியா தாலி கட்டுற நேரத்தில அந்த கல்யாணம் நின்னு போச்சு... கிட்ட தட்ட சினிமாவில வர மாதிரி...."
"என்ன???" என்றான் சஞ்சீவ் நிஜமான அதிர்ச்சியுடன்.
அவனை ஆச்சர்யமாக பார்த்த ராஜீவ்,
"என்னடா? நீ இவ்வளவு அதிர்ச்சி ஆகிற?"
தன்னை அடக்கியப் படி,