(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

காலேஜ் முடிச்சிருந்தாள். வேற ஏதோ விஷயமா இந்து என்னை பார்க்க வந்திருந்தாள், அப்போ அம்மா அவள் தான் கீதான்னு நினைச்சு கன்னா பின்னா ன்னு திட்டிட்டாங்க...."

  

"நீங்க அப்போ இல்லையா?"

  

"நான் இருந்தேன்.. என்னை பேச விட்டால் தானே... அம்மா கத்தி முடிக்கிற வரைக்கும் அமைதியாய் இருந்த இந்து, கடைசியில என்ன சொன்னாள் தெரியுமா??" என்றான் ராஜீவ் பொங்கி வந்த சிரிப்போடு.

  

"என்ன அண்ணா சொன்னாள்?" என்றான் ஆர்வத்தோடு.

  

"ஆன்ட்டி நீங்க நினைக்கிற மாதிரி நான் கீதா கிடையாது. நான் லவ் பண்ணினாலும் இந்த மாதிரி அம்மா பின்னாடி பயந்து ஒளிஞ்சிக்கிற பையனை லவ் பண்ண மாட்டேன். ஆனால் ஒன்னு, நீங்க கீதா அக்கா ன்னு நினைச்சு என்னை திட்டினதும் நல்லது தான்... அக்கா இதெல்லாம் கேட்டிருந்தால் தாங்கி இருக்க மாட்டாங்க... அக்கா நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது... அவங்களை மாதிரி இலட்சத்தில ஒருத்தர் கூட இருக்க மாட்டாங்க. நீங்க எங்க தேடினாலும், கீதா அக்கா மாதிரி ஒரு பொண்ணை உங்க பையனுக்கு கண்டு பிடிக்க முடியாது. ராஜீவுக்கும் அக்காக்கும் கல்யாணம் ஆனப் பிறகு சீக்கிரம் நீங்களே நான் சொல்றதை புரிஞ்சிப்பீங்க..."

  

"அப்படி இப்படின்னு நிறைய பேசினாள்.. அம்மா கொஞ்சம் ஷாக் அடிச்ச மாதிரி ஆயிட்டாங்க... கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாங்க. அப்போ தான் அர்ச்சனா ஆன்ட்டி வந்தாங்க. அம்மாக்கும் ஆன்ட்டிக்கும் எந்த மாதிரியான பழக்கம்ன்னு எனக்கு தெரியாது.... ஆனால் அவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே பரிச்சயம்ன்னு மட்டும் புரிஞ்சிச்சு... அவங்க கீதாக்காக பேசின பிறகு அம்மா கொஞ்சம் இறங்கி வந்தாங்க... ஆனாலும் சில நிபந்தனைகள் போட்டாங்க.. கீதா அவங்க அம்மா வீட்டுக்கு போக கூடாது... வேலைக்கு போக கூடாது அப்படி இப்படின்னு...ஆனாலும் எல்லாம் நல்ல படியா முடிஞ்சது.."

  

சிறிது நேர அமைதிக்கு பின் அவனே தொடர்ந்தான்...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.