இருந்தேன்.. " என்றாள் இந்து தயக்கத்தோடு.
சஞ்சீவிற்கு உடனடியாக காரணம் புரிந்துப் போனது!!!
"ஓஹோ, அண்ணி வேலையா இது? அப்படி என்ன சொன்னாங்க உங்க கிட்ட?"
"கீதா அக்காவும் சொன்னாங்க.. ஆனால் நானும் காலையிலேயே இதைப் பத்தி நினைச்சேன்.. உங்களைப் பார்க்கும் போது சாரி சொல்லனும்னு நினைச்சேன்..."
"பரவாயில்லைங்க இந்து... அண்ணன் காலையில தான் நீங்களும், உங்க அம்மாவும் அவன் கல்யாணத்திற்கு எப்படி உதவி செஞ்சீங்கன்னு சொன்னான்.."
"ஐயோ, ராஜீவ் அதெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்காரா என்ன? சஞ்சீவ், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா? உங்க அண்ணா கிட்ட அன்னைக்கு நான் அவரைப் பத்தி அப்படி தப்பா உங்க அம்மாக்கிட்ட பேசுனதுக்கு என்னை மன்னிச்சிட சொல்வீங்களா? நான் நிறைய முறை உங்க அண்ணா கிட்ட சொல்லிட்டேன் அவர் அப்போ எல்லாம் பேச்சை மாத்திறுவார்..."
"ம்ம்ம்... இதை நீங்க என்னை விட பவர்ஃபுல் ஆனவங்க கிட்ட சொல்லி இருக்கலாமே?"
"கீதா அக்கா கிட்ட சொன்னா அவங்க, நீ தானே பேசின நீ தான் மன்னிப்பு கேட்கனும்னு சொல்லுவாங்க.."
"உண்மையா பார்க்கப் போனால் நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும், இந்து? நீங்க சொன்னது ஒன்னும் தப்பில்லையே? அண்ணாவே அப்படி தான் என்கிட்டே சொன்னார்..."
"ச்சே ச்சே நான் பேசினது ரொம்ப தப்பு.. இந்த லவர்ஸ் விஷயமே வேற... நாம வெளியில இருந்து பார்க்கிறப்போ ஒன்னும் புரியாது... உங்க அண்ணி என்கிட்டே அப்புறம் நிறைய சொல்லி இருக்காங்க... உங்க அண்ணா அன்னைக்கு வேற எதுவும் செஞ்சுருக்க முடியாது..."
"சரி பரவாயில்லை விடுங்க... ஆனால் எங்க அம்மாக்கு அப்படி ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் தேவை தான்..."