"இல்லை இல்லை அதுவும் தப்பு தான்.. ஆனால நான் ஆன்ட்டி கிட்ட நேராகவே சாரி சொல்லிட்டேன்..."
"ஒ! அம்மா என்ன சொன்னாங்க?"
"சாரி எல்லாம் எதுக்கும்மா.. பரவாயில்லை ஆனால் இப்படி கோப படக் கூடாது.. கொஞ்சம் கோபத்தை அடக்க கத்துக்கணும்னு சொன்னாங்க.."
"நீங்க கோப படுவீங்களா இந்து? ஆச்சர்யமா இருக்கு ..."
இந்து சந்ஜீவைப் பார்த்து முறைத்தாள்...
"ஓகே, சாரி சாரி... அதுக்காக நீங்க கோபப் பட்டு டெமோ எல்லாம் காட்ட வேண்டாம்.."
சஞ்சீவ் பயப் படுவது போல் பாசாங்கு செய்வதை பார்த்து சிரித்தாள் இந்து.
அவள் சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவ்,
"அன்னைக்கு அப்படி எல்லாம் பேசிட்டு, இன்னைக்கு அம்மாவும் அண்ணியும் கொஞ்சுறதை பார்த்தால் சில சமயம் எனக்கே பொறாமையா இருக்கு... எல்லாம் அண்ணியோட குணம் தான் காரணம்..."
"அக்காவை யாருக்கும் பிடிக்காம போகாது. ஆனால், உங்க அம்மாவும் அக்காவும் எப்படி இவ்வளவு க்ளோஸ் ஆனாங்கன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா?"
தொடரும்...