"சரி விவேக், நீங்க சொல்வது போலவே செய்யலாம்!" என்றாள் பட்டும் படாமலும்.
பளிச்சிடும் கண்களுடன் அவளை நிமிர்ந்து பார்த்த விவேக்,
"நான் சொனனது என்றால் எதை சொல்கிறாய்?" என்றான்.
"வந்து... வந்து... கல்யாணம்..."
பாரதி அதற்கு மேல் தயங்கி தயங்கிப் பேச தேவை இல்லாமல்,
"வாவ், தேங்க் யூ, பாரதி... தேங்க்ஸ் எ லாட்... நிஜமா தானே சொல்ற?" என்றான் விவேக் முகம் மலர!
அவனின் மகிழ்ச்சி பொங்கும் முகத்தை பார்த்து மனம் குளிர்ந்தப்படி,
"யெஸ் ...." என்றாள் பாரதி.
"அப்போ, உடனேயே அம்மா அப்பாவிடம் சொல்லணும். பவித்ரா ஃபேமிலியிடம் சொல்லனும். இந்த லீவ் சமயத்திலேயே கல்யாணம் செய்துக்கலாம்... நீ கலயாணத்திற்குப் பிறகு வேலைக்கு போவது போகாதது எல்லாம் உன் விருப்பம்..."
விவேக் சந்தோஷத்தில் பேசிக் கொண்டே போகவும், தயக்கத்துடன்,
"இவ்வளவு அவசர படனுமா?" எனக் கேட்டாள் பாரதி.
"எஸ் மேடம்! உடனே நம் கல்யாணம் நடந்தாகனும்!" என்றான் விவேக்!
*****