சோ அவ கிட்ட நாளைக்கு தான் சொல்ல முடியும்..."
மனைவிக்காக காத்திருந்து பொறுமையை இழந்திருந்த ராஜீவ், எழுந்து மீண்டும் பால்கனிக்கு வந்தான். கீதா மீண்டும் அவனிடம் ஒரு நிமிடம் என்று சைகை காட்டவும், ஒரு வினாடி யோசித்துவிட்டு, அவள் அருகில் சென்றான். கீதா என்ன என்பது போல் பார்க்கும் போதே, அவள் கையில் இருந்த ஃபோனை வாங்கினான்... இல்லை இல்லை...பிடுங்கினான். வீணா ஃபோனில் ஏதோ சொல்லி கொண்டிருப்பது அவனுக்கும் கேட்டது. ஃபோனை காதில் வைத்தவன்,
"ஹலோ வீணா, சாரி தப்பா எடுத்துக்காத... நான் உங்க அக்காக்கு பேச கொடுத்த டைம் முடிஞ்சுப் போச்சு... நாளைக்கு காலையிலே எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் பேசு... பை குட் நைட்..." என்றான்!
மனைவியின் மறுப்பையும், அந்தப் பக்கம் ஆச்சர்யமாய் ஒலித்த வீணாவின் குரலையும் கண்டுக் கொள்ளாது அழைப்பை துண்டித்தான் ராஜீவ். கீதா கோபமாக முறைப்பதை உணர்ந்தவன், அவளை சமாதானப் படுத்தும் விதமாக,
"வாவ் கீதா, நீ கோபப் படும் தான் ரொம்ப அழகா இருக்க... அப்படியே கண்ணிலே இருந்து தீப் பொறி பறக்குது... வாவ் யூ லுக் வெரி ப்யுட்டிஃபுள்..." என்று ரசனையோடு ஆரம்பித்து சரசத்தோடு முடித்தான்.
அவனின் பேச்சில் கோபத்தை மறந்து, நிறம் மாறி நின்றவளை அலாக்காக தூக்கி உள்ளே சென்றான்.
***********
கீதா பக்கம் இணைப்பு துண்டிக்கப் பட்டவுடன் வீணா சிறிது தடுமாறி தான் போனாள். ஆனாலும் சிறிது நேரத்தில் புரிந்துக் கொண்டதற்கு அறிகுறியாக அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. தங்கள் அறையுள் சென்றவள், அவினாஷ் ரோஷினியுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள். மனைவியை பார்த்த அவினாஷ்,