தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
18. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பதிலுக்கு தயக்கத்துடன் புன்னகை புரிந்த 'ரஞ்சி',
"ஒரு ஜூஸ் குடிக்கலாம்னு வந்தேன்... சஞ்சீவ் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்... நீங்களும் சஞ்சீவோட ஃபிரெண்ட் தானே? தனியா இருக்கிறதுக்கு, உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாம்னு வந்தேன்... உங்களுக்கு..." என்று பேச்சை முடிக்காது தயங்கினாள்....
"என்ன நீங்க... இவ்வளவு ஃபார்மலா கேட்க வேண்டிய அவசியம் எல்லாம் எதுவும் இல்லை. உட்காருங்க...." என்றாள் வீணா.
இந்துவும் புன்னகைக்க, அவள் அருகில் இருந்த காலி நாற்காலியில் அமர்ந்தாள் 'ரஞ்சி'.
"சாரிங்க... நான் சஞ்சீவை அப்படி பிடிச்சு இழுத்துட்டுப் போனதை தப்பா எடுத்துக்காதீங்க..."
வீணா கேலியாய் புன்னகைக்க, முகத்தில் முடிந்த அளவில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல்,
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை..." என்றாள் இந்து.
"இல்லை, சஞ்சு... சாரி சஞ்சீவுக்கு இப்படி கோபம் வந்து நான் பார்த்ததில்லை... சாரி..."
சஞ்சீவ் தனக்காக கோபப் பட்டான் என்பதை கேட்க நன்றாக இருந்த போதும், மற்றவளுக்காக வருந்தினாள் இந்து.
"எதுக்கு இத்தனை சாரி சொல்றீங்க...?" என்று தொடங்கி அருகே இருந்தவளை ரஞ்சி என்று அழைப்பதா வேண்டாமா என்று தயங்கினாள் இந்து.
அவளின் குழப்பம் புரிந்துக் கொண்டவளாக,
"ஒ! என் பேரே சொல்லலை பாருங்க... என் பேர் ரஞ்சனி... சாரி..." என்றாள் ரஞ்சனி!
"ரஞ்சனி, நீங்க இந்த சாரி சொல்றதை நிறுத்துங்க... என் பேர் இந்து... இது என் ஃபிரெண்ட்