சாபிட்டுருக்கலாம்..." என்றாள்.
"அடடா ஆமாம்... ரொம்ப டைம் ஆயிடுச்சே... உங்க கிட்ட பேசுனதில டைம் போனதே தெரியலை ரஞ்சனி...."
"அவங்க கிட்ட பேசினதிலயா இல்ல அவங்க சொன்ன விஷயத்திலயா?" என்ற வீணா, இந்து முறைப்பதை சட்டை செய்யாது, ரஞ்சனி பக்கம் திரும்பி,
"உங்களை எங்க கிட்ட அனுப்பி பேச சொன்ன சஞ்சீவை இன்னும் காணோமே???" என்று விசாரித்தாள்.
"ஆமாம், நீ போய் இந்து கிட்ட விஷயத்தை சொல்லு... நான் ஒரு ஃபோன் பேசிட்டு வரேன்னு தான் சொன்னான்... இன்னும் காணோம்..." என்ற ரஞ்சனி, தன் தவறை சிறிது தாமதமாக உணர்ந்து,
"ஐயோ இதையும் உளறிட்டேனே... " என்றாள்.
"ஓ! நிஜமாகவே நீங்க சஞ்சீவ் சொல்லி தான் எங்க கிட்ட பேச வந்தீங்களா? நாங்க இங்கே இருக்கது உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் இந்து ஆச்சர்யத்துடன்.
"நாங்க பர்சேஸ் முடிச்சுட்டு நீங்க வெளியே வந்தால் பேசலாம்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்... நீங்க இந்த பக்கம் இந்த ஜூஸ் ஷாப்புக்கு வரவே சஞ்சு தான் என்னை அனுப்பி விட்டான்."
"என்ன என்னைப் பத்தி பேச்சு அடிப் படுது??"
சஞ்சீவின் குரல் கேட்டு திரும்பிய ரஞ்சனி,
"எவ்வளவு நேரம் சஞ்சு?" என்றாள்.
சஞ்சீவின் பார்வை இந்து பக்கம் போவதை உணர்ந்து,