முடியாது.... சில சமயம் எங்க பேக் எல்லாம் எடுத்து நோன்டுவான்... சரியான மங்கீ....."
ரஞ்சனி சொல்வதைக் கேட்டு ரசித்து கொண்டிருந்த இந்துவை மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அது என்ன ரஞ்சனி, சஞ்சீவ் கடு கடு ன்னு இருக்க மாட்டார்ன்னு சொன்னீங்க... அவருக்கு கோபமே வராதா என்ன?" என்றாள் வீணா.
இல்லை என்பது போல் தலை அசைத்த ரஞ்சனி, சிறிது யோசித்து விட்டு,
"சஞ்சீவுக்கு எப்போதாவது தான் கோபம் வரும்... அதுவும் கூட சாதாரணமா உடனே போயிடும்... ஆனால் நான் அவனை ரொம்ப கோபமா பார்த்தது விஜய்யோட கல்யாண நேரத்தில தான்... அது... இந்த விஜய் ஒரு பொண்ணை லவ் பண்ணினான்... ரெண்டு பேர் வீட்டிலையும் ஒத்துக்கலை... விஜய் வீட்டில அவனுக்கு வேற பொண்ணோட கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணி எங்க எல்லோரையும் கூட இன்வைட் பண்ணினாங்க... சஞ்சீவுக்கும் இவன் லவ் பத்தி தெரியும், நாங்க எல்லோரும் இந்த விஜய் கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தோம்... ஆனால் அவன் அப்பா அம்மா சொல்ற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னான்... கடைசியிலே கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி யாருக்கும் தெரியாமல் போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்துட்டாங்க... அவங்க ரெண்டுப் பேர் அப்பா அம்மாக்கு மட்டும் இல்லை எங்க எல்லோருக்கும் கூட ஷாக் தான்... எங்க கிட்ட சொன்னால் அவங்க அப்பா கண்டுபிடிச்சிடுவாருன்னு தான் சொல்லலைன்னு விஜய் சொன்னான்... நாங்களும் சரின்னு ஒத்து கிட்டோம்... ஆனால் சஞ்சீவுக்கு மட்டும் கோபம்... எங்க எல்லோரையும் நம்ப வச்சு ஏமாத்திட்டான்னு... கன்னா பின்னான்னு விஜய்யை திட்டினான்.. எனக்கு தெரிஞ்ச வரையில் இன்னும் அவங்க ரெண்டுப் பேரும் பேசுறதில்லை..."
"ஓ!"
ஆர்வத்துடன் கதைக் கேட்டு கொண்டிருந்த இந்துவை பார்த்த வீணா,
"என்ன இந்து மேடம், உங்க போர்ட் மீட்டிங் எல்லாம் மறந்து போச்சா? இதுக்கு நாம லஞ்ச்சே