தான்... எங்க செட்ல நாங்க மொத்தம் ஆறு பேர்... எல்லோரும் இன்னும் ஃபிரெண்ட்ஸ் தான்... ஆனால் முன்னாடி மாதிரி அவ்வளவு க்ளோஸ் இல்லை... எப்பவும் எந்த ஹெல்ப் வேணும்னாலும் சஞ்சீவ் தான்... அவனோட பேர் மாதிரியே எப்பவும் அவன் சமய சஞ்சீவி தான்..." என்றாள் ரஞ்சனி!
"ஏன் ரஞ்சனி... உங்க சஞ்சுக்கு வேற நிக் நேம் எல்லாம் இல்லையா?" என்று அவள் மின்ன கேட்டாள் இந்து....
"இல்லாமல் என்ன, அவனை நாங்க செல்லமா கடுவன்னு தான் கூபிடுவோம்.... ஆனால் சஞ்சுக்கு அது பிடிக்காது... அதனால வெறும் வெறுப்பேத்த மட்டும் யூஸ் பண்றது தான்..."
"கடுவன்னா? அது ஏன்??? அவர் என்ன எப்போதும் கடு கடு ன்னு இருப்பாரோ?" என்றாள் இந்து இன்னும் அதிகமாகி விட்ட ஆர்வத்துடன்.
"சஞ்சுவா கடு கடுன்னா ??? இல்லவே இல்லை.... எங்க செட்ல ரமணின்னு ஒருத்தன் இருந்தானா அவன் பெரிய தமிழ் பண்டிதர்... அவன் தான் சஞ்சுக்கு இந்த பேர் வச்சான்... கடுவன் அப்படின்னா தமிழ்ல ஆண் குரங்குன்னு அர்த்தமாம்..."
ரஞ்சனி சொல்வதைக் கேட்டப்படி தன்னுடைய கிரேப் ஜூஸ் குடித்து கொண்டிருந்த இந்துவிற்கு புரை ஏறியது. வீணாவிற்கும் சிரிப்பு வந்தது. அவர்கள் சிரிப்பதின் காரணத்தை தவறாக ஊகித்த ரஞ்சனி,
"ஐயோ இந்து, நான் இதை எல்லாம் உங்க கிட்ட சொன்னேன்னு சஞ்சு கிட்ட சொல்லாதீங்க...." என்றாள்!
"இல்லை... சொல்லலை... ஆனால், ஏன் இப்படி ஒரு பேர்??"
"அதுவா... அவன் க்ளாஸ்ல ஒரு இடத்தில இருக்கவே மாட்டான்... திடீர்னு பார்த்தால் லாஸ்ட் பென்ச்ல இருப்பான்... கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தால் ஃபர்ஸ்ட் பென்ச்ல இருப்பான்... எல்லாரோட லஞ்ச் பாக்சையும் எடுத்து டேஸ்ட் பண்ணி பார்ப்பான்... சரியான வாலு... எங்க டீச்சர்ஸ் எவ்வளவோ சொல்லி பார்ப்பாங்க... ஹுஹும்... அவனை ஒன்னும் செய்ய