தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
22. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இந்துவின் கேட்காத கேள்வியைப் புரிந்துக் கொண்டு,
"இப்போ தான் நீ பழைய இந்து மாதிரி இருக்க... எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிற எங்களோட பழைய இந்து... கொஞ்ச நாளா நீ சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் கூட சீரியஸா எடுத்துட்டு இருந்த... சேகர் சொன்னதைக் கேட்டு நீ இன்னைக்கும் டல்லா இருக்க போறேன்னு நினைச்சோம்... பரவாயில்லை, இப்போ தான் நீ பழைய இந்துவா மாறிட்ட..." என்று விளக்கம் கொடுத்தாள் கீதா.
இந்துவிற்கு கீதா சொல்வது புரியாமல் இல்லை... அப்பாவின் திடீர் மரணம்... அதனால் தோழிகள் மூவரும் போட்டிருந்த ப்ளானில் சட்டென்று ஏற்பட்டிருந்த தொய்வு... எதிர்பாராமல் அவள் எம்.டி ஆக வேண்டிய நிலை... பின், சேகருடன் திடீர் கல்யாண ஏற்பாடு... அதுவும் எதிர்பாராமல் நின்றுப் போன நந்தினி "ட்விஸ்ட்"...
இந்துவிற்கு அவளின் வாழ்வின் கடந்த சில வருடங்கள், நிற்க விடாமல் சூழல விடும் சூறாவளியை நினைவுப் படுத்தியது... என்ன நடக்கிறது என்று தெளிவாக புரியாமலே தான் நாட்கள் போய் கொண்டிருந்தது... ஏதோ இப்போது தான் அவளின் மனதில் கொஞ்சம் அமைதி ஏற்பட்டு இருக்கிறது...
அவள் இதை எல்லாம் யோசித்துக் கொண்டு அமைதியாக இருக்க... வீணா கீதாவிடம்,
"பின்னே சும்மாவா அக்கா... நாளைக்கு இந்துக்கு எவ்வளவு முக்கியமான நாள் தெரியுமா... ஃபர்ஸ்ட் டேட்!!!" என்றாள் கேலி மின்ன!!!
"ப்ச் வீணா.... " என இந்து அலுத்துக் கொள்ள,
"அது என்ன வீணா???" என்றாள் கீதா ஆர்வத்துடன்!
"ஓ, உங்களுக்கு தெரியாதா? நாளைக்கு சஞ்சீவும் இந்துவும் பீச்சுக்கு போறாங்க..." என்றாள் வீணா கண்களை உருட்டியப் படி!