(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"அப்படியா......" என்று முதலில் ஆச்சர்யபட்ட கீதா, பின் வீணாவிடம்,

  

"உனக்கு எப்படி தெரியும்?" என்றாள் கேள்வியாக.

  

கீதாவிற்கு "சர்ப்ரைஸ் கிஃப்ட்" வாங்க அவளும் இந்துவும் சந்தித்ததை சொல்ல முடியாதே என ஒரு வினாடி திகைத்த வீணா, இந்துவை ஒரு பார்வை பார்த்து விட்டு,

  

"இந்து தான் என் கிட்ட சொன்னா..." என்றாள்.

  

"இந்து! நீ வீணா கிட்ட மட்டும் சொல்லி இருக்க... என் கிட்ட சொல்லவே இல்லை..." என்று இந்துவிடம் குறைப்பட்டாள் கீதா.

  

இந்து அதற்கு பதில் சொல்லும் முன் குறுக்கிட்ட வீணா,

  

"நான் தான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொன்னேன்..." என்றாள்.

  

இந்துவும் வீணாவும் தங்களுக்குள் சின்ன ஸ்மைல் ஒன்றை பகிர்ந்துக் கொள்ள, கீதா என்ன என்பது போல் அவர்களைப் பார்த்தாள்!

  

"நாங்க யாராவது ஃபோன் செய்தா... அப்புறம், ராஜீவ் வேற ஃபோனை எடுத்து கட் பண்ணுவார்... பாவம் அவருக்கு ஏன் அந்த எக்ஸ்ட்ரா வேலை..." என்றாள் வீணா அந்த புன்னகை பெரிதாக!

  

வீணா சொல்வதன் காரணம் புரிந்து கீதாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் படும் பாட்டை பார்த்து மற்ற இருவருக்கும் சிரிப்பு வந்தது.

  

"ப்ச்... போதும் வீணா... பாவம் கீதாக்கா ரொம்ப கலாட்டா செய்யாதே... நீ ஏன் அவ்வளவு லேட்டா ஃபோன் பண்ணின? உன் மேல தானே தப்பு..." என்றாள் இந்து.

  

"லேட்டா? நீ வேற இந்து... நான் ஃபோன் செஞ்சது ஒன்பது மணிக்கு..."

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.