"ஆமாம் அக்கா... ஆனால் வீணா சொல்ற மாதிரி டேட் எல்லாம் இல்லை... அவர் ஏதோ பேசனும்னு சொன்னார்... அதுக்கு தான்..." என்றாள்.
"வேற என்ன உன்னோட செல்ல மங்கீ சொல்ல போறார்... உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறார்...." என்றாள் வீணா.
"சும்மா இரு வீணா. நானும் சஞ்சீவும் மீட் பண்ணி ஒரு மாசம் தான் ஆகப் போகுது..." என்றாள் இந்து சீரியசாக!
"அதனால என்ன... இப்போல்லாம் ஒரே நாள்ல ப்ரொபோஸ் பண்றாங்க..."
"ப்ச்..."
"வீணா சொல்றது மாதிரியும் இருக்கலாம் இந்து... வீட்டில அத்தை வேற அவங்க தம்பி பொண்ணு கண்மணிய கூட்டிட்டு வந்து தங்க வச்சிருக்காங்க..." என்றாள் கீதா.
"ஓ! நம்ம இந்துவோட வில்லி கண்மணியா?" என்றாள் வீணா.
இந்துவின் முகத்தில் யோசனை கோடுகள் தென்பட்டன.
"ச்சே ச்சே வீணா, கண்மணியை அப்படி சொல்லாதே... அவ ரொம்ப தங்கமான பொண்ணு... எனக்கே சஞ்சீவ் இந்து விஷயம் சீக்கிரம் தெளிவானால் நல்லதுன்னு தோணுது... தேவையே இல்லாமல் அந்த பொண்ணோட மனசை வேற காயப் படுத்த வேண்டாம் தானே..." என்றாள் கீதா.
"ஒருவேளை சஞ்சீவுக்கும் அப்படி தான் தோணி இருக்குமோ என்னவோ..." என்றாள் வீணா.
"இருக்கலாம்... நீ சொல்லு இந்து, சஞ்சீவ் உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணினால் நீ என்ன சொல்ல போற?" என இந்துவிடம் நேரடியாக கேட்டாள் கீதா.