"அதுவும் லேட் தானே?"
"சொல்ல மாட்ட நீ... அக்காக்கு கல்யாணம் ஆன புதுசில என்ன சொன்னாங்க? பத்து மணிக்கு முன்னாடி ஃபோன் செய்யலாம்னு சொன்னாங்க... சரி இப்போ ரெண்டு வருஷம் ஆக போகுதேன்னு ஒன்பது மணிக்கு ஃபோன் செய்தால் அதுவும் லேட்டா? ம்ம்ம்ம்..."
வீணா சொன்ன விதத்தில் இந்துவிற்கும் சிரிப்பு வந்தது. கீதாவின் முகம் மேலும் சிவந்தது.
"சரி, ராஜீவ் அப்படி இருந்தால் அக்கா என்ன செய்ய முடியும்?"
"ஒன்னும் செய்ய முடியாது தான்... இவங்க இரண்டுப் பேரும் இப்படி இருக்க காரணம் காஞ்சனா ஆன்ட்டியும், அவங்க கொடுக்குற செல்லமும் தான்... வேற என்ன..." என இந்துவிடம் சொன்ன வீணா, கீதாவிடம்,
"நான் உங்களுக்கு ஒரு ஐடியா தரவா... சீக்கிரம் ஒரு குழந்தை பெத்துக்கோங்க..." என்றாள் வீணா கிண்டலாக!
அவளின் கேலி உணர்ந்து பதிலுக்கு புன்னகைத்த கீதா,
"குழந்தை தானே... அடுத்த வருஷம் பார்க்கலாம்..." என்றாள்!
"ஓஹோ, அதுவும் அப்படியா... இந்து, இனிமேல் நாம ஏழு மணிக்கு மேல அக்காவை டிஸ்டர்பே பண்ண கூடாது... அவங்க ரொம்ப பிஸியா இருப்பாங்க...."
வீணா கண்ணடித்து சொல்ல மற்ற இருவரும் சிரித்தார்கள்.
"போதும் வீணா நிறுத்து... நீ சொல்லு இந்து, நாளைக்கு நிஜமாகவே சஞ்சீவோட பீச்சுக்குப் போக போறீயா?" எனக் கேட்டாள் கீதா.
கீதா பேச்சை மாற்ற விரும்புவதை உணர்ந்து இந்துவும் அவளுக்கு உதவினாள்.