நினைவில் வந்தது... ஒரு வேளை கமலாவின் வேலையாக இருக்குமோ? ஆனால், கமலாவிற்கும் சஞ்சீவ் பற்றி அதிகமாக எதுவும் தெரியாதே... இந்து மனதுள் பல புதிய கேள்விகளுடன் குழம்பினாள்...
அதைக் கவனித்த வீணா... இந்து மீண்டும் பழைய மாதிரி குழப்பத்திற்கு போய் விடக் கூடாதே என்ற எண்ணத்தில், அவளின் கவனத்தை திசை திருப்ப,
"ஆன்ட்டி எதுக்காக பேசினாங்கன்னு நமக்கு தெரியாது... அது போகட்டும்... இந்து, நீ இப்போ பதில் சொல்லு... சஞ்சீவ் உன்கிட்ட லவ் செய்றேன்னு சொன்னா, நீ என்ன பதில் சொல்ல போற?" என கீதா கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டாள் வீணா.
இந்து பதில் சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை...
"வேற என்ன சொல்வேன் வீணா? யோசிக்கனும்ன்னு சொல்வேன்..." என்றாள்!
அவளின் பதில் வீணா, கீதா இருவருக்குமே ஆச்சர்யத்தைக் கொடுத்தது!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...