இந்து பதில் சொல்லும் முன், வீணா பேசினாள்.
"வேற என்ன சொல்லுவா... யெஸ் தான்... சஞ்சீவைப் பத்தி அன்னைக்கு ஏதோ நான் கேட்டதுக்கு இந்து முகம் சிவந்ததை நீங்க பார்த்திருக்கனும்... எனக்கே நம்ம இந்து அவ்வளவு அழகான்னு அதிசயமா இருந்தது..."
இந்து வீணாவை முறைத்தாள். வீணா அவளுக்கு உதட்டை சுழித்து பழித்துக் காட்டினாள். இருவரையும் பார்த்து புன்னகைத்த கீதா,
"நீங்க இரண்டுப் பேரும் எனக்கு தெரியாமல் எப்போ மீட் பண்ணினீங்க?" எனக் கேட்டாள்.
திரும்பவும் தவறாக வாய் விட்டு விட்டதை உணர்ந்துக் கொண்ட வீணா, சுதாரித்துக் கொண்டு,
"அர்ச்சனா ஆன்ட்டி கிட்ட இந்து சஞ்சீவோட போக பெர்மிஷன் வாங்க போனேன்... அப்போ தான் நாங்க இதெல்லாம் பேசினோம்..." என பொய் சொன்னாள்!
"ஓ! இது எப்போ நடந்துச்சு?"
"நேத்து அக்கா..."
"ஓஹோ...! இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா?? அர்ச்சனா ஆன்ட்டி இன்னைக்கு அத்தைக்கு ஃபோன் பண்ணி, சஞ்சீவுக்கு இப்போ கல்யாணம் பண்ற ஐடியா இருக்கான்னு கேட்டாங்களாம்... ஒருவேளை இதனாலயா இருக்குமோ?"
கீதா சொன்னதைக் கேட்டு இந்துவும் வீணாவும் திகைத்து தான் போனார்கள்! உண்மையில், அர்ச்சனாவிடம் சஞ்சீவ் – இந்து சந்திப்பை பற்றி அவர்கள் இருவரும் எதுவும் சொல்லவில்லையே! அப்புறம் எதற்கு இந்த ஃபோன்-கால்????
ஆஃபீஸில் அம்மாவும், கமலாவும் ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்ததைப் பார்த்தது இந்துவின்