மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 16 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
ஜீப்பில் ஏறிய உடனேயே, நினைவில் குறிப்பெடுத்து வைத்திருந்தவற்றை தன்னுடைய மொபைல் நோட்ஸில் சேவ் செய்து வைத்தாள் சக்தி.
இப்போதும் அமைதியாக இருந்த சத்யாவின் தோளில் தட்டி அழைத்தாள்.
“நீங்க இப்படி சின்னக் குழந்தையா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை சத்யா. விட்டா அழுதுருவீங்க போல இருக்கே?”
சக்தி கிண்டல் செய்வது புரிந்துக் கொண்டு வீராப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள் சத்யா.
“தென்றல்வாணன் உங்களை பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்ன்னு கேள்விப் பட்டேன். இப்படி கைக் குழந்தை மாதிரி இருந்தா அவர் வேற என்ன செய்வார்,” என விடாமல் 'கலாய்த்தாள்' சக்தி!
“அதெல்லாம் இல்லை சக்தி! அஹல்யா பத்தி சவீதா சொன்னதை என்னால நம்பவே முடியலை,” என்றாள் சத்யா இன்னமும் தெளிவாகாத குரலில்.
“சவீதா சொன்னது பொய்யாக கூட இருக்கலாம் சத்யா.”
“இல்லை சக்தி. சவீதா இந்த ஊரு லோக்கல் ஜான்சி ராணி மாதிரி. தப்பு எதுவா இருந்தாலும் தட்டிக் கேட்குற கேரக்டர். நாங்க இந்த ஊருக்கு வந்த புதுசுல இங்கே பக்கத்துல இருக்க பார்க்குல ரவுடிப் பசங்க வரதும், அங்கே வாக்கிங் வரவங்களை கிண்டல் செய்றது , தண்ணி அடிச்சு மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்குறதுன்னு ஒரே கலாட்டா. மத்தவங்க எல்லோரும் புலம்பினாங்களே தவிர ஒன்னும் செய்யலை. சவீதா தான் அவங்களை தட்டிக் கேட்டு, ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளெயின்ட் கொடுத்தாங்க. இப்போ அங்கே யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை.
அதே மாதிரி பஸ் ஸ்டாப்புல விடலைப் பசங்க தொல்லை இருந்துச்சு. ஸ்கூல போற சின்ன பொண்ணுங்க கிட்ட எப்போ பாரு ஏதேதோ பேசி தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. அப்போவும் சவீதா தான் முன்னால நின்னு தட்டிக் கேட்டது. அவங்க கொடுத்த கம்ப்ளெயின்ட்