(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

வச்சு, தனியா மஃப்டில போலீசை அனுப்பி அவனுங்களை பிடிச்சு உள்ளேப் போட்டாங்க.”

  

“வாவ்! இதை எல்லாம் நீங்க முன்னாடி சொல்லவே இல்லை! தெரிஞ்சிருந்தா சவீதாவை பாராட்டி இருந்திருப்பேனே”

  

“நாம தேடி வந்தது சவீதாவைன்னு எனக்குத் தெரியாதே சக்தி. இந்த ஊருல புரளி பேசுற மத்தவங்களை பத்தி எனக்குத் தெரியாது. ஆனா சவீதா அப்படி பேசுற கேரக்டர் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். இப்போ புரியுது எதனால கம்ப்ளெயின்ட் வந்த உடனேயே அபினவ் கிட்ட இவர் அட்வைஸ் கொடுத்தாருன்னு!”

  

“அப்போ அடுத்து நாம என்ன செய்றது?”

  

“இன்னும் அஹல்யாவை என்னால தப்பா நினைக்க முடியலை சக்தி. ஆனா சவீதா சொல்லும் போது, ரொம்ப குழப்பமா இருக்கு. அபினவ் கிட்ட அஹல்யா சொன்ன பதிலை வேற எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியலை.”

  

“அப்படி என்ன சொன்னா?”

  

அபினவ் அஹல்யா நடுவே நடந்த மேகம் பற்றிய உரையாடலை சக்தியிடம் பகிர்ந்தாள் சத்யா.

  

“இதனால பிடிக்காது, பிடிக்கும்ன்னு வெளிப்படையா சொல்லாம ஏன் இப்படி மர்மமா அவ பதில் சொல்லனும் சக்தி?”

  

சக்தியின் மனதில் ஒரு காரணம் உதயமானது. ஆனாலும் அதை சொல்லாமல்,

   

“தெரியலையே சத்யா! பேசாம இந்த விசாரணையை இங்கேயே முடிச்சிடுவோமா? உலகத்துல நம்ம கண்ணுக்கு தெரியுறதை தாண்டி எவ்வளவோ இருக்கு. மனைவி குழந்தையை கொலை செய்த கணவன், சொந்த குழந்தையை கொலை செய்த அம்மான்னு கேஸை எல்லாம் பார்த்து என் மனசு காய்ச்சு போச்சு. அந்த மாதிரி சிதைஞ்சு போன மனநிலை இருக்குறவங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.