தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
25. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"நிஜமாவா? என்னால நம்பவே முடியலை!" என்றான் சஞ்சீவ்!
"நீங்க நம்பி தான் ஆகனும். வீணாக்கு மட்டும் இல்ல, கீதா அக்காக்கும் அப்படி தான்... நானும் வீணாவும் இல்லைன்னா உங்க அண்ணாவும், அண்ணியும் இன்னும் ப்ரொபோஸ் பண்ணி இருப்பாங்களோ என்னவோ..." என்றாள் இந்து புன்னகை விரிய!
"நிஜமாகவா???" என்றான் சஞ்சீவ் ஆச்சர்யத்துடன்.
ஆம் என்று தலை அசைத்த இந்து,
"எங்க மூணுப் பேருக்குள்ளே ஒரு எழுதாத சட்டமே உண்டு... காலேஜ்ல யாராவது பசங்க சும்மா கடலை போட வந்து பேசி போர் அடிச்சா என்ன பண்ண முடியும்... அதனால, அப்படி எங்க மூணு பேர்ல யாராவது மாட்டிக்கிட்டா, மத்த ரெண்டுப் பேரும் ஒரு பத்து நிமிஷம் பார்ப்போம், அதுக்குள்ள அந்த போர் போகலைன்னா, மத்த ரெண்டுப் பேரும் சும்மா பேச போறது போல போய் அந்த பையனை அங்கே இருந்து துரத்தி விட்டுடுவோம்..."
சஞ்சீவ் அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான்... அவனின் பார்வையை பார்த்து சிரித்து விட்டு,
"நிஜமா தான் சஞ்சீவ்! சில சமயம் மூஞ்சில அடிக்கிற மாதிரி ஏதாவது சொல்லிட்டும் வர முடியாது... சீனியரா இருந்தா இன்னும் பிரச்சனை.... ரொம்ப கஷ்டமா இருக்கும்... இப்படி யாரவது வந்து ஹெல்ப் பண்ணலைன்னா ரொம்ப நேரம் ப்ளேட் கேட்க வேண்டியதாயிடும்... அதனால நாங்க ஸ்கூல் படிக்கிற டைம்ல இருந்தே எங்களுக்குள்ளே இதை ஒரு ரூல் மாதிரி வச்சிருந்தோம்... எங்க மூணு பேர்ல யாராவது தனியா ஏதாவது பையன் கிட்ட மாட்டிக்கிட்டா... பத்து நிமிஷம் கழிச்சு மீதி ரெண்டுப் பேரும் வந்து காப்பாத்துவாங்க..." என்று கண் சிமிட்டலோடு முடித்தாள் இந்து.
"ஆனால், அண்ணன் அண்ணி விஷயம்..." என்று எழுத்தான் சஞ்சீவ்.
"அது கொஞ்சம் சினிமா டைப் லவ் ஸ்டோரி... ராஜீவ் எங்க சீனியர்... அவர் முதல்ல அறிமுகம் ஆனது எனக்கு தான்... உங்க அண்ணாக்கு நாலேட்ஜ் ரொம்ப ஜாஸ்தி... எனக்கு நிறைய