அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் சஞ்சீவ்.
அவனின் பார்வையில் நெஞ்சு படபடத்த போதும், முகத்தை கடல் பக்கம் திருப்பி,
"இருட்டுறதுக்கு முன்னாடிப் பேசிட்டு கிளம்பலாம் வாங்க...." என்றாள் இந்து.
அவளின் பேச்சை ஏற்றுக் கொண்டவனாய் சஞ்சீவ் கார் கதவை திறந்து இறங்கவும், இந்துவும் காரில் இருந்து வெளியில் வந்தாள். இருவரும் நடந்து மணலில் சற்று வசதியான இடத்தில் அமர்ந்தார்கள்.
சிறிது நேரம் இருவரும் அமைதியாக கடலைப் பார்த்த படி அமர்ந்திருந்தார்கள். சஞ்சீவுடன் இப்படி மாலை பொழுதில் கடற்கரை ஓரம் அமர்ந்திருப்பதே இந்துவிற்கு சொர்க்கமாக தான் தோன்றியது... ஆனால் அதிக நேரம் இப்படி இருக்க முடியாது என்பதை உணர்ந்தவளாய், சஞ்சீவ் பக்கம் திரும்பி பார்த்தாள். யோசனையுடன் அமர்ந்திருப்பவனை பார்த்தவுடன் அவள் முகத்தில் புன்னகை தோன்றியது...
"சஞ்சீவ், ஏதோ பேசனும்னு சொன்னீங்க...???"
இந்துவின் குரலில் திரும்பி பார்த்த சஞ்சீவ், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
"நான் என்ன பேசனும்னு நினைக்கிறேன்னு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"
என்னவோ ஒன்று மனதை உறுத்தியப் போதும், அது என்ன என்று புரியாததால், அதை மறந்து, இல்லை என்ற அர்த்தத்தில் தலை அசைத்தாள் இந்து.
"பொய்.... உனக்கு நல்லா தெரியும்..." என்றான் சஞ்சீவ்.
"சரி, அப்படியே இருக்கட்டும்... ஆனால் நீங்க சொல்லப் போறீங்களா இல்லையா?"
முகத்தை திருப்பி கடலைப் பார்த்த சஞ்சீவ்,