தடவை ஸ்டடீஸ்ல ஹெல்ப் பண்ணி இருக்கார்... என் மூலமா தான் அவரை கீதா அக்காக்கும் வீணாக்கும் தெரியும்... ஆனால் ராஜீவுக்கும், அக்காக்கும் நடுவில லவ் இருக்கிற விஷயம் எனக்கும் வீணாக்கும் கொஞ்சம் லேட்டா தான் தெரியும்... ராஜீவ் என்கிட்டே பேசும் போது, பாதி நேரம் கீதா அக்கா பத்தி தான் கேட்பார்.... அக்கா கிட்ட ராஜீவ் கூட நான் பேசிட்டு வந்தேன்னு சொன்னாலே அவங்க முகம் மாறிப் போயிடும்... ஆனால், இதெல்லாம் முதல்ல ஒன்னும் புரியலை... இதைப் பத்தி முதல்ல கண்டு பிடிச்சது வீணா தான்... அப்புறம் கொஞ்சம் கீனா(keen-ஆ) நோட் பண்ணின போது, இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கிற இண்டரெஸ்ட் புரிஞ்சது... ஆனாலும் அவங்க ரெண்டுப் பேரையும் சேர்த்து வைக்க நாங்க செஞ்ச வேலைங்க கொஞ்சம் நஞ்சம் இல்லை....."
பேச்சை நிறுத்தி விட்டு, பழைய ஞாபகத்தில் புன்னகைத்த இந்து மீண்டும் தொடர்ந்தாள்.
"ராஜீவாவது ஒருவழியா ஒத்துக் கிட்டார்... கீதா அக்கா ஹுஹும்ம்ம்... அவங்க ரெண்டுப் பேரையும் மீட் பண்ண வைக்க நாங்க நிறைய பொய் எல்லாம் சொல்வோம்.... ஈவ்னிங் ஷாப்பிங் போகலாம்னு சொல்லிட்டு அக்காவை வர சொல்லிட்டு நாங்க ரெண்டுப் பேரும் கடைசி நிமிஷத்தில எதாவது வேலை இருக்குன்னு சொல்லிட்டு போகாமல் இருந்திருவோம்... கரெக்டா ராஜீவ் அப்போ அங்கே வந்திருவார்... இப்படி நிறைய...."
சஞ்சீவ் இந்துவை அதிசயமாகப் பார்க்க... அவள் மீண்டும் சிரித்தாள்...
"பின்னே, எங்களை என்னன்னு நினைச்சீங்க... எப்படியோ.... ரெண்டுப் பேரும் கடைசியா லவ் ப்ரொபோஸ் பண்ணி... இப்போ கல்யாணமும் பண்ணிக் கிட்டாங்க....."
"உங்களை மாதிரி ஃபிரெண்ட்ஸ் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்... உங்களுக்கும் அவங்க ரெண்டுப் பேரும் இப்படி ஹெல்ப் எல்லாம் பண்ணுவாங்களா?"
சஞ்சீவை நேராகப் பார்த்து புன்னகைத்த இந்து,
"கட்டாயமா... சந்தேகமே இல்லை..." என்றாள்!
முதல் நாள் பார்த்த போது ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக இருந்த இந்து, இன்று