(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

இப்படி சரளமாக பேசுவதை கேட்க, சஞ்சீவிற்கு அதிசயமாகவும் இருந்தது, சுகமாகவும் இருந்தது! இந்துவின் பேச்சும், பேச்சின் நடுவில் வந்த புன்னகையும், அவனுக்கு கார் ஓட்டுவதில் கவனத்தை செலுத்துவதை கடினமாக்கின. அவளை பேச விட்டு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் அவனுள் எழுந்தது.

  

"ம்ம்ம்ம்... பொதுவா எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும் போல இருக்கு..." என்று அவனே பேச்சை தொடர்ந்தான்.

  

"அப்படி சொல்ல முடியாது.... எங்க ஃபிரென்ட்ஷிப்பை பிடிக்காதவங்களும் இருக்காங்க..." என்றாள் இந்து.

  

"நிஜமாவா?"

  

"ம்ம்ம்ம்..." என்று தலை ஆட்டிய இந்து, சஞ்சீவ் பக்கம் தயக்கத்துடன் ஒரு பார்வை பார்த்தாள்... ஆனால் உடனடியாக மனதை மாற்றிக் கொண்டவளாக,

   

"உங்க கிட்ட சொல்ல என்ன... கீதா அக்காவோட அம்மாக்கு என்னைப் பிடிக்காது... ஏன் என்னன்னு எனக்கு தெரியாது... ஆனால், நானும் அவ்வளவா அவங்க வீட்டுக்குப் போறது கிடையாது..." என்றாள்

  

சஞ்சீவிற்கு இந்த தகவல் புதிது! அது அவனுள் சில, பல கேள்விகளையும் ஏற்படுத்தியது!

   

ஆனால், இந்துவைப் பிடிக்காத தன் அண்ணியின் அம்மா மீது அவனுக்கு கோபமும் வந்தது! அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்க,

   

"ஓ!" என்று மட்டும் சொல்லி முடித்தான்!

  

இந்துவும் உடனே எதுவும் சொல்லவில்லை... சில நிமிடங்கள் அமைதியாக செல்ல... பின் சஞ்சீவ் பக்கம் பார்த்த இந்து,

  

"நீங்க பேசனும்ன்னு சொல்லிட்டு என்னைப் பேச விட்டு கேட்டுட்டு இருக்கீங்க... எனக்கு பேசி,

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.