(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

பேசி தொண்டையே வறண்டுப் போச்சு..." என்றாள்!

  

"ஓ சாரி... அதோ ஒரு இளநீர் கடை இருக்கு... அங்க நிறுத்துறேன்..." என்ற சஞ்சீவ், இந்துவின் மறுமொழிக்கு காத்திருக்காது சொன்னது போல் இளநீர் கடை அருகில் காரை நிறுத்தினான். அவனே இந்துவிற்காக தேடி இளநீர் செலக்ட் செய்து எடுத்தும் கொடுத்தான்!

  

அவனின் செய்கைகள் இந்துவிற்கு அதிசயமாக இருந்தது. அவனின் அருகே நின்று இளநீர் அருந்துவதும் புது விதமான அனுபவமாக தான் அவளுக்கு இருந்தது.

   

இருவரும் இளநீர் அருந்தி விட்டு, பீச்சை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.

  

🌼🌸❀✿🌷

   

கிழக்கு கடற்க்கரை சாலையில் இருந்த அந்த பெரிய கேட்டின் முன் காரை நிறுத்தினான் சஞ்சீவ். கார் சத்தம் கேட்டு வாட்ச்மேன் ஓடி வந்து எட்டிப் பார்த்தான். சஞ்சீவ் கையை காட்டவும் வாட்ச்மேன் கேட்டை திறந்து விட்டான். பின் சஞ்சீவைப் பார்த்து வணக்கம் போட்டு விட்டு,

  

"சின்ன அய்யா சொன்னாருங்க... நேரா போனீங்கன்னா கடல் தெரியும்..." என்றான்.

  

அவனுக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, அவன் சொன்ன திசையில் காரை செலுத்தினான் சஞ்சீவ். சிறிது நேரத்தில் கடல் கண்ணுக்கு தெரிந்தது... காரை நிறுத்தி விட்டு,

  

"இது என் ஃபிரெண்டோட சீ வியு (sea view) பங்களா... தனியா பேச வசதியா இருக்குமேன்னு தான் உங்களை இங்கே கூட்டிட்டு வந்தேன்... உங்களுக்கு பிரச்சனை இல்லையே...." என இந்துவிடம் கேட்டான் சஞ்சீவ்!

  

"ம்ம்ம்ம்... ஒன்னரை மணி நேரமா எங்கே போறோம்ன்னு சொல்லாமல், இப்போ இங்கே வந்தப்புறம் பிரச்சனையான்னு கேட்டால் நான் என்ன சொல்லனும் சஞ்சீவ்...??"

  

கண்ணில் குறும்பு மின்ன கேட்ட இந்துவை விட்டு பார்வையை அகற்ற முடியாமல்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.