இருந்தாள்.
இது அவள் எதிர்பார்த்திருக்காதது அல்ல... அவள் எதிர்பார்த்தது தான்... ஆனால் சஞ்சீவ் நேராக கேட்ட போது, பதில் சொல்ல அவளுக்கு தயக்கமாக இருந்தது.
"சஞ்சீவ்... என்னைப் பத்தி உங்களுக்கு பெரிசா எதுவும் தெரியாது..."
"நீ இவ்வளவு அல்ட்ரா மாடர்ன்னு எனக்கு தெரியாதே... பழகிப் பார்த்துட்டு முடிவு பண்ண நான் ரெடி தான்..." என்றான் சஞ்சீவ் கண்களில் குறும்பு மின்ன.
"ப்ச்... நான் அப்படி சொல்லலை... இது எவ்வளவு பெரிய விஷயம்... எதை வச்சு இவ்வளவு சீக்கிரம் முடிவு பண்ணினீங்க?" என்றாள் இந்து சீரியசாக!
"உன்னை முதல் டைம் பார்த்ததில் இருந்தே எனக்குள்ளே ஒரு தாக்கம் இருந்தது... சினிமாவில வர மாதிரி அன்னைக்கு உங்க ஆஃபீஸ்ல நான் உன்னைப் பார்த்த போதே நாலைஞ்சு தேவதைங்க பக்கத்தில வந்து டான்ஸ் ஆடினாங்க... பின்னாடி பேக்-கிரௌன்டில மியூசிக் வேற கேட்டுச்சு..."
இந்து முறைக்கவும்...
"ஈசி ஈசி மேடம்... நிஜமாவே உன்னை அன்னைக்கு பார்த்த உடனே எனக்குள்ளே ஒரு பெரிய தாக்கம் தான்... அப்புறம், அன்னைக்கு எங்க வீட்டில வச்சு ஒரு பார்வை பார்த்தீயே, அப்படியே மின்னல் வெட்டின மாதிரி இருந்துச்சு.... அப்புறம் உன்னைப் பத்தி அண்ணா அண்ணி கிட்டப் பேசி தெரிஞ்சு கிட்டது.... உன் கிட்டப் பேசினது... எல்லாம் வச்சு பார்க்கும் போது எனக்கான இன்னொரு பாதி நீ தான்னு தோணிச்சு..." என தன் விளக்கத்தை தொடர்ந்தான் சஞ்சீவ்.
அவன் சொல்வதைக் கேட்க நன்றாக இருந்த போதும், அதற்கு மேல் அவனை தொடர அனுமதிக்காமல் குறுக்கிட்டுப் பேசினாள் இந்து.
"என் லைஃப்ல உங்களுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கு... எனக்கு இதுக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயமாகி..."