(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"சரியோ தப்போ நீங்க சொல்றதை கேட்க எனக்கு சந்தோஷமா தான் இருக்கு சஞ்சீவ்... ஆனால் யோசிச்சுப் பாருங்க... நீங்க சொல்றது சரியான்னு... உங்க அம்மாவும் எங்க அம்மா மாதிரி தானே... என்ன தான் வெளியே காட்டலைன்னாலும் உங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருப்பாங்க... நீங்க இப்படி எல்லாம் நினைக்கவே கூடாது.... நான் சொல்ல வந்தது வேற..."

  

சற்று தயங்கி நிறுத்திய இந்து, சஞ்சீவ் கேள்வியுடன் அவளைப் பார்க்கவும்,

  

"நான் சொல்றதை நீங்க பொறுமையா கேட்கனும்... உங்க அண்ணா அண்ணி கல்யாண டைம்ல காஞ்சனா ஆன்ட்டி சில கண்டிஷன் போட்டாங்க... அதைப் பத்தி உங்களுக்கு தெரியுமா???" எனக் கேட்டாள்.

  

"ரொம்ப தெரியாது...... ராஜீவ் சொன்னான்..."

  

"ம்ம்ம்ம்... காஞ்சனா ஆன்ட்டி ரெண்டு கண்டிஷன் போட்டாங்க... ஒன்னு... கீதா அக்கா வேலைக்கு போக கூடாது... ரெண்டாவது... அக்கா அவங்க அம்மா வீட்டுக்கு போக கூடாதுன்னு..."

  

"ம்ம்ம்ம்...."

  

"உங்களுக்கு உங்க அண்ணி பத்தி நிறைய விஷயம் தெரியாது சஞ்சீவ்.... படிக்கும் போது கீதா அக்கா நிறைய கனவு வச்சிருந்தாங்க.... அவங்களுக்கு எங்க அம்மா ஒரு பெரிய ரோல் மாடல் மாதிரி... அக்கா டென்த் எக்ஸாம் எழுதி லீவில இருந்தப்போ எங்க கிட்ட ஒரு பெரிய பிளானைப் பத்தி சொன்னாங்க... அவங்க படிச்சு முடிச்சுட்டு ஆரம்பிக்க போற புது கம்பெனி பத்தின ப்ளான்...."

  

"பதினஞ்சு வயசிலையா???

  

"ஆமாம்... கீதா அக்கா குடும்பத்தில எல்லோரும் பெரிய கவர்ன்மென்ட் ஜாப்ஸ்ல இருந்திருக்காங்க. ஆனால், யாரும் தனியா பிஸ்னஸ் செஞ்சது இல்லை.... அக்காக்கு அதில்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.