(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

ரொம்ப ஆர்வம் இருந்தது... அவங்க ஆரம்பிக்குறதா இருந்த கம்பனிக்கு நானும் வீணாவும் பார்ட்னர்ஸா இருக்குறோம்னு சொன்னோம்... அது மட்டும் இல்லை பிஸ்னஸ் பிளான், ப்ராஜெக்ட் பிளான் எல்லாம் போட்டு வச்சிருந்தாங்க... வீணாக்கு இதில ரொம்ப ஆர்வம் இல்லை... எனக்கும் கொஞ்சமா தான் இன்டரெஸ்ட் இருந்துச்சு.... ஆனால் கீதா அக்கா சொல்றதை நாங்க ரொம்ப இன்டரெஸ்ட்டோட தான் கேட்போம்.... அது அக்காவோட தனி திறமை... படிச்சு முடிச்சு ரெண்டு வருஷம் கழிச்சு தானே அக்கா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... அதுக்கு நடுவில என்ன செஞ்சுட்டு இருந்தாங்க தெரியுமா? எம்பிஏ படிச்சாங்க...."

  

சஞ்சீவ் ஆச்சர்யமாக பார்க்கவும்,

  

"ஆமாம் சஞ்சீவ்.... அவங்களோட ட்ரீம் கம்பெனியை தொடங்குறதுக்கு முன்னாடி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க விரும்பினாங்க.... அதெல்லாம் நல்லா தான் நடந்தது... ஆனால், கம்பெனின்னு ஒன்னு கீதா அக்கா ஸ்டார்ட் செய்றதுக்கு முன்னாடியே அவங்க காதல் விஷயம் வெளியே வர, எல்லாம் தலைக் கிழே மாறிப் போச்சு.... நான் என் அப்பா அம்மாவை விட, நிறைய விஷயம் கத்துக்கிட்டது அக்கா கிட்ட தான்... நீங்க சொன்னீங்களே... உங்க வீடு ரொம்ப மாறிப் போச்சுன்னு... அதெல்லாம் அக்காவோட திறமை தான் வேற என்ன..."

  

"இதெல்லாம் ராஜீவ் பண்ணின தப்பு... அவன் எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டான்? உனக்கு தெரிஞ்சிருக்க மாதிரி இதெல்லாம் அவனுக்கும் தெரியும் தானே?" என்றான் சஞ்சீவ் கோபத்தோடு.

  

"இல்லை சஞ்சீவ், இந்த விஷயத்தில உங்க அண்ணனை குற்றம் சொல்ல முடியாது... உங்க அம்மா போட்ட கண்டிஷனை ஏத்துக்க சொல்லி அவர் அக்காவை கட்டாயப்படுத்தவே இல்லை... இன்னும் கொஞ்சம் நாள் காத்திருந்தால் எல்லாம் சரி ஆயிடும்ன்னு தான் சொன்னார்... ஆனால் கீதா அக்கா தான் கேட்கலை... அவங்களுக்கு அவங்களோட கனவை விட காதல் தான் பெரிசா தோணிச்சு..."

  

"ஓ!"

  

"ம்ம்ம்ம்... அவங்க எடுத்த முடிவை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்... ஆனால் ஒன்னை

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.